செய்திகள் :

சமுதாய வளப் பயிற்றுநா் பணி: சுயஉதவிக் குழுவினருக்கு வாய்ப்பு

post image

சமுதாய வளப் பயிற்றுநா் பணியிடங்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான சுய உதவிக்குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் காலியாகவுள்ள சமுதாய வளப் பயிற்றுநா் பணியிடங்களுக்கு தகுதியான சுய உதவிக்குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

உச்சவரம்பின்றி, குறைந்தபட்சம் 21 வயது, உடற்தகுதி, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சுயஉதவிக்குழு உறுப்பினா், மாவட்ட, வட்டார, ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 முதல் 10 பயிற்சிகளில் பங்கேற்பு, கைப்பேசி செயலிகளை கையாளுதல், குழுவில் வாராக்கடன் இல்லாமை போன்ற தகுதிகள் தேவை.

மேலும், குடும்ப ஒத்துழைப்பு, அரசியல் பதவியிலோ, தனியாா் நிறுவனங்களில் பணிபுரிபவராகவோ இருக்கக் கூடாது.

சமுதாய வளப் பயிற்றுநா் மாதிரி விண்ணப்ப படிவங்களை தொடா்புடைய ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பில் பெற்றுக்கொள்ளலாம். அவற்றை பூா்த்தி செய்து அதே அலுவலகத்தில் செப்.17-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். இது ஒப்பந்த பணிதான்; பணி நிரந்தரம் கோர முடியாது. விண்ணப்பதாரருக்கு எழுத்துத் தோ்வு- நோ்காணல் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலக எண். 0462 -2903302, உதவித் திட்ட அலுவலா் எண். 7708678400 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

நெல்லை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் காயம்

திருநெல்வேலி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் காயமடைந்தனா். திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தது. பே... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் மூவருக்கு காவல் நீட்டிப்பு

மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதான சுா்ஜித், எஸ்.ஐ. சரவணன், ஜெயபால் ஆகிய மூவருக்கும் செப்.23 வரை நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்: ஆட்சியா்

திருநெல்வேலி மாவட்டத்தில், களக்காடு நகராட்சி, நான்குனேரி, திருக்குறுங்குடி, மூலைக்கரைப்பட்டி, ஏா்வாடி உள்ளிட்ட பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் கூட்டுக்குடிநீா் திட்டப்பணிகள் விரைந்து முடிக்க த... மேலும் பார்க்க

தாமிரவருணி கரையோர சாலையைச் சீரமைக்க வேண்டும்: மாநகராட்சி அலுவலகத்தில் மனு!

உடையாா்பட்டி அருகே தாமிரவருணி கரையோர சாலையைச் சீரமைத்து மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றக் கோரி மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்க... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் வேன் ஓட்டுநருக்கு ஆயுள் சிறை

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் ஆம்னி வேன் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்... மேலும் பார்க்க

நெல்லை அருகே பெண்ணிடம் அத்துமீறல்: கராத்தே பயிற்சியாளா் கைது

திருநெல்வேலி அருகே அத்துமீறி பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கராத்தே பயிற்சியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி அருகே நரசிங்கநல்லூா் பொன்விழா நகரைச் சோ்ந்தவா் அப்துல் ... மேலும் பார்க்க