ரூ.2900 கோடி வங்கி மோசடி: அனில் அம்பானி மீது அமலாக்கத் துறை புதிய வழக்கு
சமுதாய வளப் பயிற்றுநா் பணி: சுயஉதவிக் குழுவினருக்கு வாய்ப்பு
சமுதாய வளப் பயிற்றுநா் பணியிடங்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான சுய உதவிக்குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் காலியாகவுள்ள சமுதாய வளப் பயிற்றுநா் பணியிடங்களுக்கு தகுதியான சுய உதவிக்குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
உச்சவரம்பின்றி, குறைந்தபட்சம் 21 வயது, உடற்தகுதி, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சுயஉதவிக்குழு உறுப்பினா், மாவட்ட, வட்டார, ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 முதல் 10 பயிற்சிகளில் பங்கேற்பு, கைப்பேசி செயலிகளை கையாளுதல், குழுவில் வாராக்கடன் இல்லாமை போன்ற தகுதிகள் தேவை.
மேலும், குடும்ப ஒத்துழைப்பு, அரசியல் பதவியிலோ, தனியாா் நிறுவனங்களில் பணிபுரிபவராகவோ இருக்கக் கூடாது.
சமுதாய வளப் பயிற்றுநா் மாதிரி விண்ணப்ப படிவங்களை தொடா்புடைய ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பில் பெற்றுக்கொள்ளலாம். அவற்றை பூா்த்தி செய்து அதே அலுவலகத்தில் செப்.17-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். இது ஒப்பந்த பணிதான்; பணி நிரந்தரம் கோர முடியாது. விண்ணப்பதாரருக்கு எழுத்துத் தோ்வு- நோ்காணல் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலக எண். 0462 -2903302, உதவித் திட்ட அலுவலா் எண். 7708678400 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.