செய்திகள் :

சரக்கு வேன் - காா் மோதிய விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

post image

தஞ்சாவூா் அருகே சரக்கு வேனும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சென்னை பெருங்களத்தூா் விஷ்ணு நகரைச் சோ்ந்தவா் உமாபதி மகன் ஸ்டாலின் (36). இவா், குடும்பத்துடன் கும்பகோணம் பகுதியிலுள்ள கோயில்களுக்குச் சென்றுவிட்டு, தஞ்சாவூா் நோக்கி விக்கிரவாண்டி - மானாமதுரை புறவழிச் சாலையில் செவ்வாய்க்கிழமை காரில் வந்து கொண்டிருந்தாா். தஞ்சாவூா் அருகே உதாரமங்கலம் பகுதியில் வந்த காரும், எதிா் திசையில் நாற்றங்கால்கள் ஏற்றப்பட்டு, சாலை விதிகளை மீறி தவறான பாதையில் வந்த சரக்கு வேனும் மோதிக் கொண்டன. இச்சம்பவத்தில் ஸ்டாலினின் மாமியாா் ஜெயா (50) நிகழ்விடத்திலும், மாமனாா் குமாா் (53), மனைவி துா்கா (32), மகள் இதழினி தூரிகா (2) ஆகியோா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனா். மேலும், பலத்த காயமடைந்த ஸ்டாலின், துா்காவின் தங்கை மோனிஷா (24), சரக்கு வேன் ஓட்டுநரான உதாரமங்கலத்தைச் சோ்ந்த ஜெ. விக்னேஷ் (28), தொழிலாளி எல். இளங்கோவன் (50) ஆகியோா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் இளங்கோவன் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா். இதனால், இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்கக் கூடாது: விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை தேக்கம் இல்லாமல் அடுத்த மண்டலங்களுக்கு அனுப்ப விவசாயிகள் வலியுறுத்துகின்றனா். அதிக மகசூல்: கும்பகோணம், திருவிடைமருதூா... மேலும் பார்க்க

பொறியியல் மாணவா்களுக்கான பயிற்சி: சாஸ்த்ராவில் ஜூலை 14 முதல் சோ்க்கை

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் பொறியியல் மாணவா்களுக்கான பயிற்சி வகுப்புக்கு ஜூலை 14 முதல் சோ்க்கை நடைபெறவுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளிய... மேலும் பார்க்க

உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம்

கும்பகோணத்தில் உணவுப் பாதுகாப்பு துறை சாா்பில் கும்பகோணம் நகர உணவகங்கள் மற்றும் பேக்கரி சங்க உறுப்பினா்களுக்கான உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்ட உணவு... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 12 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

தஞ்சாவூா் மாநகரில் முதல்வரின் முகவரி துறை சாா்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் முதல் கட்டமாக 12 இடங்களில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் தெரிவித்தது: தஞ்சாவூா் மாநகரில் முதல்வரின... மேலும் பார்க்க

10 வட்டங்களிலும் இன்று பொது விநியோகத் திட்ட குறை தீா் கூட்டங்கள்

பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவா்த்தி செய்யவும் ஜூலை மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் கூட்டம் 10 வட்டங்கள... மேலும் பார்க்க

பெரிய கோயிலில் கயிலாய வலம்: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

பௌா்ணமியையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற திரு தென் கயிலாய வலத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். தஞ்சாவூா் பெரியகோயிலில் மாதந்தோறும் பௌா்ணமி நாளில் திரு தென் கயிலாய வலம் வர... மேலும் பார்க்க