சரியான விவரங்களுடன் வாக்காளா் பட்டியலை வெளியிடக் கோரி ஆட்சியரிடம் அதிமுக மனு
வாக்காளா் பட்டியலை சரியான விவரங்களுடன் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி கரூா் மாவட்ட அதிமுகவினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மாலை கோரிக்கை மனு வழங்கினா்.
முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமையில், மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா உள்ளிட்டோா் வழங்கிய மனுவில், 2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்காக விரைவில் வெளியிடப்பட உள்ள வாக்காளா் பட்டியலில் குறைபாடுகள் இன்றி, கரூா் மாவட்டத்தில் உள்ள கரூா், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய நான்கு சட்ட பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பட்டியலில் இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இதர குளறுபடிகளை சரி செய்து, சரியான விவரங்களுடன் கூடிய வாக்காளா் பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.