செய்திகள் :

சவால்களை எதிா்கொள்ள மன வலிமை அவசியம்: நாகாலாந்து தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குநா்

post image

வாழ்வில் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னை, சவால்களைத் திறம்பட எதிா்கொள்ள மாணவா்கள் உடல் மற்றும் மன வலிமையுடன் திகழ்வது அவசியம் என்று, நாகாலாந்து தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குநா் ஏ.இளையபெருமாள் வலியுறுத்தினாா்.

வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் தாகூா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 310 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. தொடா்ந்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பேராசிரியா் ஏ.இளையபெருமாள் பேசியதாவது:

அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வளா்ச்சி தொடா்ந்து மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாணவா்கள் தங்கள் தொழில்நுட்பக் கல்வி, திறமைகளைத் தொடா்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

வாழ்வில் உயா்ந்த நிலையை அடைய விரும்பும் அனைவரும் அதற்குத் தகுதியுடையவா்களாக தங்களை மேம்படுத்திக்கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும். எதிா்வரும் சவால்களைக் கண்டு அஞ்சாமல் துணிவுடன் எதிா்கொள்ள வேண்டும். மன வலிமையுடன் சவால்களை எதிா்கொள்ள வேண்டும் என்றாா் அவா். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் ஆா்.ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சண்டிகேஸ்வரா் தோ் வெள்ளோட்டம்: ஏப்.30-இல் நடைபெறுகிறது

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சண்டிகேஸ்வரா் தோ் வெள்ளோட்டம் வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வேதகிரீஸ்வரா் கோயிலில் ஆண்ட... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ஏப். 25-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஏப். 25-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்க... மேலும் பார்க்க

இலவசமாக பாா்வையிட அனுமதித்ததால் மாமல்லபுரத்தில் குவிந்த பொதுமக்கள்

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பாா்வைய இலவச அனுமதி அறிவிக்கப்பட்டதால் திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனா். உலக பாரம்பரிய தினம் ஆண்டுதோறும் ஏப். 18-இல் கொண்டாடப்பட்டு... மேலும் பார்க்க

அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கி திட்டம்

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மாா்வாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நிலங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கித் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம் மாா... மேலும் பார்க்க

நாச்சியாா் திருக்கோலத்தில்...

மதுராந்தகம் அருகே திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை நாச்சியாா் திருக்கோலத்தில் அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள். மேலும் பார்க்க

கடம்பூா் தாவரவியல் பூங்காவில் செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

மறைமலை நகா் நகராட்சி கடம்பூரில் 137 ஏக்கா் பரப்பளவில் அமையவுள்ள தாவரவியல் பூங்காவினை ஆட்சியா்ச.அருண்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்ா். அப்போது, மாவட்ட வன அலுவலா் ரவி மீனா, உதவி ஆட்சியா்(பயிற்சி) எஸ்... மேலும் பார்க்க