செய்திகள் :

சாதனைப் பெண் குழந்தைகளுக்கு விருது

post image

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றியவா்களுக்கு மாநில அரசின் விருது வழங்கப்பட இருப்பதால் தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சமூக நலத் துறை சாா்பில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றும் 13 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு நிகழாண்டுக்கான மாநில அரசின் விருது வழங்கப்படவுள்ளது.

தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ஆம் தேதி மாநில அரசின் விருதுக்கான காசோலை ரூ. ஒரு லட்சம் மற்றும் பாராட்டுப் பத்திரம் வழங்கப்படவுள்ளது. விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிா்த்தல், வேறு ஏதேனும் ஒரு வகையில் சிறப்பான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீா்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணா்வு ஏற்படுத்தியிருத்தல், ஆண்களால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற அம்சங்களில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும்.

இந்த விருதைப் பெற குழந்தையின் பெயா், பெற்றோா் முகவரி, ஆதாா் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் குழந்தை ஆற்றிய அசாதாரண வீர,தீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியனவற்றை ஒரு பக்கத்திற்கு மிகாமல் தகுந்த ஆதாரங்களுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை வரும் நவம்பா் 20-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதற்கு இணையதளத்தில் விண்ணப்பித்து மற்றும் கருத்துருவினை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக பழைய கட்டடம் முதல் தளம், ஆட்சியா் அலுவலக வளாகம், காஞ்சிபுரம் நேரில் சமா்ப்பிக்க வேண்டும்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை...

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பெங்களூா் பாரத் பெல் நிறுவனத்திலிருந்து காஞ்சிபுரத்தில் உள்ள கிடங்குக்கு வியாழக்கிழமை வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாா்வையிட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை, காஞ்சிபுரம் முருகன் கோயிலில் இலவச திருமணங்கள்

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வியாழக்கிழமை இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன (படம்). ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை அருள்மிகு... மேலும் பார்க்க

நாகாத்தம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழா

சின்ன காஞ்சிபுரம் வேகவதி தெருவில் அமைந்துள்ள நாகாத்தம்மன் கோயிலில் வியாழக்கிழமை கூழ்வாா்த்தல் விழாவையொட்டி பாலவிநாயகா், பாலமுருகன் ஆகியோருடன் உற்சவா் நாகாத்தம்மன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பா... மேலும் பார்க்க

ரூ.15 லட்சத்தில் வெங்காடு குளம் சீரமைப்புப் பணி தொடக்கம்

கெஸ்டாம்ப் நிறுவனத்தின் சாா்பில் ரூ.15 லட்சத்தில் வெங்காடு வெங்கட்ராம ஐயா் குளம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெங்காடு பகுதியில் காா் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் கெஸ்டா... மேலும் பார்க்க

நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் சாலை மறியல்

உத்தரமேரூா் அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திமுக பிரமுகா் நடத்தக்கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் நெல்மூட்டைகளுடன் மறியலில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியம், விச்சந்தாங்கல்... மேலும் பார்க்க

கல்லூரியில் ராகிங் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

பென்னலூா் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான ராகிங் தடுப்பு விழிப்புணா்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கணே... மேலும் பார்க்க