செய்திகள் :

சாதனை படைத்த தமிழன்..! ஐபிஎல் வரலாற்றில் இடம் பிடித்த சாய் சுதர்சன்!

post image

ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சாய் சுதர்சனும் இணைந்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் (23 வயது) குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.

ஐபிஎல் போட்டிகள் 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 973 ரன்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

இந்த வரிசையில் 3-ஆவது இந்தியராக 700 ரன்களை கடந்து சாய் சுதர்சன் சாதனை படைத்துள்ளார்.

எலிமினேட்டர் போட்டியில் 80 ரன்கள் குவித்த சாய் சுதர்சன் இதன்மூலம் இந்த சீசனில் 759 ரன்களை எடுத்து முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள்

1. விராட் கோலி - 973 (இந்தியா) - ஆர்சிபி

2. ஷுப்மன் கில் - 890 (இந்தியா) - குஜராத்

3. ஜாஸ் பட்லர் - 863 (இங்கிலாந்து) - ராஜஸ்தான்

4. டேவிட் வார்னர் - 848 (ஆஸ்திரேலியா) - ஹைதாராபாத்

5. சாய் சுதர்சன் - 759 (இந்தியா) - குஜராத்

முதல் முறை சாம்பியனாக முனைப்பு! பெங்களூரு - பஞ்சாப் இன்று பலப்பரீட்சை!

ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) பலப்பரீட்சை நடத்துகின்றன.இரு அணிகளுமே முதல் முறையாக கோப்பை வெல்லும் முனைப்புடன் வருகின்றன... மேலும் பார்க்க

வேலை இன்னும் முழுமையாக முடியவில்லை: ஷ்ரேயாஸ் ஐயர்

ஐபிஎல் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் வேலை இன்னும் முழுமையாக முடியவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாதம் கோலாகலமாகத் தொடங்கிய 18-வது ஐபிஎல்... மேலும் பார்க்க

விராட் கோலிக்காக கோப்பையை வென்று கொடுக்க விரும்புகிறோம்: ஆர்சிபி கேப்டன்

விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க விரும்புவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நாளை (ஜூன் 3) நடைபெறும் இறுதிப்போட்டிய... மேலும் பார்க்க

ஆர்சிபியின் 18 வருட காத்திருப்பா? பஞ்சாப் கிங்ஸின் எழுச்சியா? முதல் கோப்பை யாருக்கு?

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை ... மேலும் பார்க்க

ஷ்ரேயாஸ் ஐயர், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம்!

பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா இருவருக்கும் பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது. நடப்பு ஐபில் தொடரின் நேற்றிரவு நடைபெற்ற குவாலிஃபையர் 2- போ... மேலும் பார்க்க

ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!

ஐபிஎல்லில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து அந்த அணியின் உரிமையாளர் முத்தமிட்ட விடியோக்கள் இணைத்தில் வைரலாகி வருகின்றன.நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நட... மேலும் பார்க்க