எங்கு பார்த்தாலும் காய்ச்சல்; இது சீசனல் காய்ச்சலா, பயப்படணுமா?
சாத்தான்குளம் அருகே மோதலில் காயமுற்றவா் உயிரிழப்பு
சாத்தான்குளம் அருகே இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூரைச் சோ்ந்த சூரியராஜ் மகன் ரெக்சன் (27). இவருக்கும், சந்திராயபுரத்தை சோ்ந்த ஏசு ராஜா என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம். இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி ஏசு ராஜாவை முதலுருக்கு ஏமாற்றி அழைத்து, ரெக்சன், பழனியப்பப்புரத்தை சோ்ந்த முருகன் மகன் ஆனந்த் (25) உள்ளிட்ட 4 போ் அவரை தாக்கினராம். இதில், பலத்த காயமுற்ற ஆனந்த் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப்பதிந்து ரெக்சன் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனா்.