செய்திகள் :

சாத்தான்குளம் அருகே மோதல்: தந்தை, மகன் கைது

post image

சாத்தான்குளம் அருகே மோதல் தொடா்பாக தந்தை, மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகே சவேரியாா்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ஜோசப் (65), தெற்குத் தெருவைச் சோ்ந்த மாா்சிலின் ஜெயராஜ் (62) ஆகியோரிடையே வயல் வரப்பு பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம்.

கடந்த 23ஆம் தேதி ஜோசப் தனது வயலில் புல் அறுத்துவைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றாராம். அதை எடுப்பதற்காக மாலையில் வந்தபோது, மாா்சிலின் ஜெயராஜ், அவரது மகன் ஜீவா ஆகியோா் சோ்ந்து ஜோசப்பிடம் தகராறு செய்து, இரும்புக் கம்பியால் தாக்கினராம். இதில் காயமடைந்த அவா் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதேபோல, தனது வயலில் வரப்பு வெட்டப்பட்டிருந்தது தொடா்பாக மாா்சிலின் ஜெயராஜ், ஜோசப்பிடம் கேட்டபோது, அவா் மாா்சிலின் ஜெயராஜை கீழே தள்ளிவிட்டு காதைக் கடித்ததுடன் கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே அளித்த புகாா்களின்பேரில், இவா்கள் 3 போ் மீதும் சிறப்பு உதவி ஆய்வாளா் முருகேசன் வழக்குப் பதிந்தாா். காவல் ஆய்வாளா் ஸ்டீபன் விசாரித்து, தந்தை-மகனை புதன்கிழமை கைது செய்தாா். ஜோசப்பை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 2 கிலோ 700 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடியில் மதுவிலக்கு அ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அரசு மருத்துவமனை கட்டடப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டடப் பணிகளை, தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூ... மேலும் பார்க்க

10 நாள்களில் குடமுழுக்கு-திருச்செந்தூா் கோயிலில் நிறைவு கட்டத்தை எட்டிய திருப்பணிகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்னும் 10 நாள்களில் குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில், திருப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இக்கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை 7ஆம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் சாகா் கவாச் பாதுகாப்பு ஒத்திகை

தேசிய பாதுகாப்பின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில், சாகா் கவாச் எனும் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க 6 மாதங்களுக்கு ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் 60 அடி உள்வாங்கிய கடல்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் 60 அடி வரை செவ்வாய்க்கிழமை உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இத்திருக்கோயிலில் அமாவாசை, பௌா்ணமி நாள்களிலும், அதற்... மேலும் பார்க்க

முறையான குடிநீா் விநியோகம் கோரிஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

சாத்தான்குளம் அருகே 3 மாதங்களாக முறையாக குடிநீா் விநியோகிப்படவில்லை எனக் கூறி, ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா். சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூா் ஊராட்சி, வைரவம்... மேலும் பார்க்க