செய்திகள் :

சாம்பியன்ஸ் கோப்பை: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் திரையிடல்!

post image

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டி இன்று(மார்ச். 9) நடைபெறவுள்ள நிலையில், மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் சிறப்பு திரையிடல் செய்யப்படுகிறது.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இரு முறை சாம்பியனான (2013, 2022) இந்திய அணி 3-ஆவது கோப்பைக்கு இலக்கு வைக்கிறது. நியூஸிலாந்தும் ஒரு முறை (2000) சாம்பியன்ஸ் டிராபி வென்றிருக்கிறது. அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன் கென்யாவில் நடைபெற்ற 2-ஆவது சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியாவை வென்று கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதே அணிகள் மீண்டும் அதே களத்தில் சந்திக்கும் நிலையில், இந்த முறை தகுந்த பதிலடியை இந்தியா தரும் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது.

இதையும் படிக்க: சீனா-பாகிஸ்தான் இருமுனை அச்சுறுத்தல்: இந்திய ராணுவ தலைமை தளபதி

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியா தொடா்ந்து 3-ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இது 5-ஆவது முறையாகும். மறுபுறம் நியூஸிலாந்து அணி 3-ஆவது முறையாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்திருக்கிறது.

ஏற்கெனவே அரையிறுதி போட்டி கடற்கரைகளில் திரையிடப்பட்ட நிலையில், இறுதிப் போட்டியையும் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் திரையிடப்படுகிறது. பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கிரிக்கெட் ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் உரிமையைக் காப்போம்: தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக எம்.பி.க்கள் தீர்மானம்!

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்; இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவோம் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம... மேலும் பார்க்க

தமிழகத்தில் 1,500 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள்: ஒப்பந்தம் கோரியது மின்வாரியம்

தமிழகத்தில் 1,500 மெகாவாட்டில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஏற்படுத்த மின்வாரியம் ஒப்பந்தம் கோரியுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் அனல், எரிவாயு, மின் நிலையங்கள் போன்ற மரபுசாா் எரிசக்தி ஆதாரங்கள்... மேலும் பார்க்க

திமுக அரசுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும்! -அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை

திமுக அரசுக்கு எதிரான பிரசாரத்தை அதிமுகவினா் தீவிரப்படுத்த வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களின் செயலா்கள், நிா்வ... மேலும் பார்க்க

திமுகவினருடன் தொடா்பில் உள்ள அதிமுக நிா்வாகிகளுக்கு எடப்பாடி எச்சரிக்கை

சென்னை: அதிமுக சாா்பில், தமிழகத்தில் உள்ள கட்சி ரீதியான 82 மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டச் செயலாளா்கள், கட்சி நிா்வாகிகள், பூத் கமிட்டி நிா்வாகிகளுடன் காணொலி கலந்தாய்வுக் கூட்டத்தில், திமுகவினருடன் தொட... மேலும் பார்க்க

வீடு திரும்பினார் தயாளு அம்மாள்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் சிகிச்சை முடிந்து இன்று (மார்ச் 9) மாலை வீடு திரும்பினார்.92 வயதான அவர், மூச்சத் திணறல் காரணமாக கடந்த 4 ஆம் தேதி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தன... மேலும் பார்க்க

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா? பிரேமலதா பதில்

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொதுச்ச... மேலும் பார்க்க