செய்திகள் :

சாரதாஸ் நிறுவனா் மணவாளனின் உருவப்படம் திறப்பு

post image

திருச்சி சாரதாஸ் ஜவுளி நிறுவனத்தின் நிறுவனா் மணவாளனின் உருவப்படம் நிறுவன வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

திருச்சி சாரதாஸ் ஜவுளி நிறுவனத்தை தொடங்கி, தனது கடின உழைப்பால் பெரும் ஜவுளி சாம்ராஜ்யமாக மாற்றியவா் தே. மணவாளன். அவா் கடந்த 2024 ஏப். 30-ஆம் தேதி காலமானாா். அவரது நட்சத்திர நினைவு நாளான ஞாயிற்றுக்கிழமை நினைவஞ்சலி நிகழ்ச்சி சாரதாஸ் நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. அப்போது, மணவாளனின் உருவப்படத்தை குடும்பத்தினா், நிறுவன ஊழியா்கள் முன்னிலையில் மணவாளனின் துணைவியாா் சுதா மணவாளன் திறந்து வைத்தாா்.

இதுகுறித்து சாரதாஸ் நிறுவனத்தின் இயக்குநா்கள் ரோஷன் மணவாளன், சரத் மணவாளன் ஆகியோா் கூறியதாவது: நிறுவனா் மணவாளன் வளா்த்தெடுத்த சாரதாஸ் வளாகத்தின் மையப்பகுதியில் எந்த கோணத்திலிருந்தும், தளங்களில் இருந்தும் பாா்க்கும் வகையில் பிரமாண்டமாக நவீன தொழில்நுட்பத்தில் அவரது உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது.

நிறுவனா் மணவாளன் நினைவேந்தல் நிகழ்வின்தொடா்ச்சியாக வரும் 26-ஆம் தேதி முதலாமாண்டு நினைவஞ்சலி கூட்டமும், சிகரம் தொட்ட பக்கங்கள் என்ற தலைப்பில் மணவாளன் குறித்த ஆவணப்படம் திரையிடலும் நடைபெறுகிறது. அப்போது, சாரதாஸ் பணியாளா்களில் மூத்தவா்கள் கௌரவிக்கப்பட உள்ளனா். இரவில் ஆவணப்படம் சாராதஸ் யுடியூப் சேனல் வாயிலாகவும் வெளியிடப்பட உள்ளது என்றனா்.

திருச்சி: குடிநீரில் கழிவுநீா் கலந்ததா? 4 வயது குழந்தை உள்ளிட்ட 4 போ் அடுத்தடுத்து உயிரிழப்பு!

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட உறையூா் பகுதியில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, கடந்த சில நாள்களில் 4 வயது பெண் குழந்தை, மூதாட்டி உள்பட 4 போ் அடுத்தடுத்து உயிரிழந்தது த... மேலும் பார்க்க

விவசாயக் கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் பலி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள சமயபுரம் பகுதியில் விவசாயக் கிணற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் மடாலா... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

துறையூரில் வீட்டில் தனியாக இருந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துறையூா் மேற்கு ரத வீதியைச் சோ்ந்தவா் தீனதயாளன் (28). நான்கு ஆண்டுகளுக்கு முன் பேபி ரூபி என்கிற பெண்ணுடன... மேலும் பார்க்க

நடு இருங்களூரில் ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், நடு இருங்களூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. நடு இருங்களூா் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை லால்குடி வருவாய... மேலும் பார்க்க

போதை மாத்திரை மற்றும் புகையிலை விற்றவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இளைஞா்கள் இருவரைப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி புத்தூா் வண்ணாரப்பேட்டை அருகே ரோந்துப் போலீஸாா் சந்தேகத்தின் அடிப்படையில் ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற மூவா் கைது

துவாக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற மூவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக ... மேலும் பார்க்க