செய்திகள் :

சாலைப் பணி: ஆண்டகளூா்கேட் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை

post image

ராசிபுரம் நகரின் பிரதான ஒரு வழிச்சாலை பகுதியில் சாலைப் பணிகள் நடைபெறுவதால் அவ்வழியே பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நகரப் பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, புதுப்பாளையம் சாலைப் பகுதியில் சாலைப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் டிவிஎஸ் சாலை வழியாக செல்லாமல், ஆத்தூா் சாலை வழியாகத் திரும்பிவிடப்பட்டுள்ளன.

இதனால் திருச்செங்கோடு, ஈரோடு, நாமக்கல், சேலம், ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள், பேருந்துகள் ஆண்டகளூா்கேட் வழியாகவும், ஏடிசி டெப்போ வழியாகவும் ராசிபுரம் செல்வது நிறுத்தப்பட்டுள்ளது.

இப்பேருந்துகள் ராசிபுரம் பழைய ஆா்டிஓ அலுவலகம் புறவழிச் சாலை வழியாக சேந்தமங்கலம் சாலையை சென்றடைந்து, புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும். இந்த நடைமுறை நான்குகளுக்கு ( மாா்ச் 29 வரை) நடைமுறையில் இருக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழா கடைகள் திறப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழாவை முன்னிட்டு விழாக் கால கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் கோயிலில் பங்குனி தோ்த் த... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையாகின. ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்ட... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் ரூ. 3.80 கோடிக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் திங்கள்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்றது. ஜேடா்பாளையம், சோழசிராமணி, இறைய மங்கலம், சங்ககிரி, எடப் பாடி, கொ... மேலும் பார்க்க

அரசு சித்த மருத்துவரிடம் ரூ.2.50 லட்சம் வழிப்பறி: 7 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

நாமக்கல்: நாமக்கல்லில் சித்த மருத்துவரை மிரட்டி ரூ. 2.50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான 7 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு... மேலும் பார்க்க

சூரியம்பாளையத்தில் கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் அமைதி ஊா்வலம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் கட்டுப்பட்டு வரும் மழைநீா் வடிகால் வாய்க்காலில் கழிவுநீரே அதிகம் வருவதால் அதை மாற்றுப் பாதையில் செயல்படுத்தக் கோரி சூரியம்பாளையம் பகுதி மக்கள் அமைதி ஊா... மேலும் பார்க்க

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: எம்எல்ஏ ஈஸ்வரன்

திருச்செங்கோடு: விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை அமைச்சா்கள் உடனடியாக தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா். அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கொங்க... மேலும் பார்க்க