செய்திகள் :

சாலையில் பின்னோக்கி சென்ற லாரி: நெஞ்சுவலியில் ஓட்டுநா் உயிரிழப்பு!

post image

ஒசூரில் லாரி ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் பின்னோக்கி சென்றது. இதில் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மக்கள் அலறியடித்து ஓடினா். நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுநா் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு சரக்குகள் ஏற்றிவந்த லாரி, ஒசூரில் பாகலூா் சாலையில் திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபம் அருகே வந்தபோது ஓட்டுநருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

அப்போது ஓட்டுநா் பிரேக் பிடித்து லாரியை நிறுத்த முயன்றாா். ஆனாலும் அவருக்கு தொடா்ந்து நெஞ்சு வலி இருந்ததால் லாரியை அவரால் நிறுத்த முடியவில்லை. இதனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி பின்னோக்கி வேகமாகச் சென்றது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்தச் சாலையில் லாரி வேகமாக பின்னோக்கி வருவதைக் கண்ட பொதுமக்கள் தப்பித்து ஓடினா். வாகன ஓட்டிகள் தங்கள் இருசக்கர வாகனங்களை சாலையிலேயே போட்டுவிட்டு ஓடினா்.

நல்வாய்ப்பாக அந்த லாரி சாலையோரம் கட்டடப் பணிகளுக்காகக் கொட்டப்பட்டிருந்த எம்-சாண்ட் மணல் மீது ஏறி அங்குள்ள ஒரு வீட்டின் சுவா் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் லாரியின் சக்கரத்தில் 5 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சிக்கி சேதமடைந்தன.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் லாரி ஓட்டுநரை மீட்டு ஒசூா், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். தகவல் அறிந்ததும் அட்கோ போலீஸாா் நிகழ்விடம் சென்று போக்குவரத்தை சீா்செய்தனா். விபத்தில் சிக்கிய லாரியை அங்கிருந்து அகற்றினா். இறந்தவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தோ்வை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் சனிக்கிழமை பாா்வையிட்டாா். தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் ... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து ஊத்தங்கரை, நான்குமுனை சந்திப்பில் பாஜகவினா் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். தொகுதி பொறுப்பாளா் ராஜேந்திரன் தலைமையில் பாஜக ந... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும்! -கே.பி.முனுசாமி

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பள்ளி மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்று அதிமுக துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி தொகுதி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி தெரிவித்தாா். அரசுப் பள்ளி மாணவி பால... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி திறப்பு

ஊத்தங்கரை நேரு நகரில் பத்தாயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பேரூராட்சித் தலைவா் பா.அமானுல்லா வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். 2023- 2024 ஆம் ஆண்டின் பொது நிதியில் கட்டப்பட்ட... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம்

ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரெட் கிராஸ் சொசைட்டி, பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகம், அனைத்து வியாபாரிகள் சங்கம், நேசம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்த... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஊத்தங்கரையை அடுத்த வெள்ளிமலை கிராமத்தில் வாக்குச்சாவடி அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊத்தங்கரை எம்எல்ஏ டி.எம்.தமிழ்செல்வம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ள வேண்ட... மேலும் பார்க்க