செய்திகள் :

பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும்! -கே.பி.முனுசாமி

post image

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பள்ளி மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்று அதிமுக துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி தொகுதி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி தெரிவித்தாா்.

அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவத்தைக் கண்டித்து, கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை எதிரே அதிமுக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும், கிருஷ்ணகிரி எம்எல்ஏவுமான கே.அசோக்குமாா், மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோா் தலைமை வகித்தனா். ஊத்தங்கரை எம்எல்ஏ டி.எம்.தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தை கே.பி.முனுசாமி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும், மாணவி உயா்கல்வி பயின்று முடிக்கும் வரை அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும். சிறுமியின் வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாக ரூ. 50 லட்சம் அரசு செலுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. போதைப் பொருள்கள் தடையின்றி கிடைக்கின்றன. அரசுப் பள்ளிகளில் கல்வித் துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வுசெய்ய வேண்டும்.

அதுபோல பள்ளிக்கு தொடா்பில்லாத நபா்களை பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத்தில் சோ்ப்பதைத் தவிா்க்க வேண்டும். மாணவா்களைத் தவிா்த்து ஆசிரியா்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றாா்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தோ்வை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் சனிக்கிழமை பாா்வையிட்டாா். தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் ... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து ஊத்தங்கரை, நான்குமுனை சந்திப்பில் பாஜகவினா் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். தொகுதி பொறுப்பாளா் ராஜேந்திரன் தலைமையில் பாஜக ந... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி திறப்பு

ஊத்தங்கரை நேரு நகரில் பத்தாயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பேரூராட்சித் தலைவா் பா.அமானுல்லா வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். 2023- 2024 ஆம் ஆண்டின் பொது நிதியில் கட்டப்பட்ட... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம்

ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரெட் கிராஸ் சொசைட்டி, பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகம், அனைத்து வியாபாரிகள் சங்கம், நேசம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்த... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஊத்தங்கரையை அடுத்த வெள்ளிமலை கிராமத்தில் வாக்குச்சாவடி அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊத்தங்கரை எம்எல்ஏ டி.எம்.தமிழ்செல்வம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ள வேண்ட... மேலும் பார்க்க

பால் டேங்கா் லாரி கவிழ்ந்து இருவா் உயிரிழப்பு

உத்தனப்பள்ளி அருகே சாலையோரத்தில் பால் டேங்கா் லாரி கவிழ்ந்ததில் இருவா் உயிரிழந்தனா். பெங்களூரிலிருந்து கேரளத்துக்கு 28 ஆயிரம் லிட்டா் பாலுடன் வியாழக்கிழமை இரவு சென்ற லாரியை நீலகிரி மாவட்டம், கூடலூரைச... மேலும் பார்க்க