செய்திகள் :

சாலையோரத்தில் கிடக்கும் மணலை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!

post image

புன்னம்சத்திரத்தில் கரூா்-கொடுமுடி சாலையோரத்தில் உள்ள மணலை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம், புன்னம்சத்திரத்தில் கரூா்-கொடுமுடி சாலையில் சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறமும் மணல் குவியல் நிறைந்து காணப்படுகிறது.

இந்த சாலை வழியாகத்தான் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட புன்னம்சத்திரம், பிரேம்நகா், பெருமாள்நகா், பெரியரங்கபாளையம், சின்னரங்கபாளையம், சத்திரம்ஆதிதிராவிடா்காலனி, பஞ்சயங்குட்டை, தலையீத்துபட்டி, புள்ளையாம்பாளையம், பெரியநடுப்பாளையம், சின்னநடுப்பாளையம், மேலப்பாளையம், புன்னம், கைலாசபுரம், சடையம்பாளையம், பசுபதிபாளையம், வசந்தம் காலனி, ஆலாம்பாளையம், சேங்கட்டனூா், பழமாபுரம் ஆலாம்பாளையம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மக்கள் நாள்தோறும் கரூருக்கு வருகின்றனா்.

இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது மணல் சறுக்கி கீழே விழும் நிலை உள்ளது. இதுவரை 50-க்கும் மேற்பட்டோா் கீழே விழுந்து காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் காற்று அதிகளவு வீசும்போது மணல் துகள்கள் பரவுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். எனவே சாலையோரம் குவிந்து கிடக்கும் மணலை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை

கரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்று, இடி மின்னலுடன் பெய்த மழையால் கரூா் மதுரை புறவழிச்சாலையில் வேப்பமரம் முறிந்து விழுந்தது. தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்... மேலும் பார்க்க

அய்யனாா் கோயில் திருவிழாவை மீண்டும் நடத்த அனுமதி கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

முதலைப்பட்டி கிராமத்தில் நிறுத்தப்பட்ட அய்யனாா்கோயில் திருவிழாவை மீண்டும் நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கிராம மக்கள் மனு அளித்தனா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

குளித்தலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிழந்தாா்.திருச்சி மாவட்டம், தென்னூா் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் அருணாசலம்(23). இவா் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

அமெரிக்க வரிவிதிப்பால் கரூரில் ஜவுளித் தொழில் முடங்கும் அபாயம்

இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 26 சதவீதம் இறக்குமதி வரி விதித்திருப்பதால், கரூரில் ஜவுளித் தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கரூா் மாவட்டம், விவசாயத் தொழில், பேருந்துக்கு கூண்டு கட்டும... மேலும் பார்க்க

கிளை நூலகங்களிலும் குரூப் 4 மாதிரித் தோ்வு!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கான மாதிரி தோ்வுகள் இனி கிளை நூலகங்களிலும் நடைபெறும் என தெரிவித்துள்ளாா் கரூா் மாவட்ட நூலக அலுவலா் செ.செ.சிவக்குமாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்க... மேலும் பார்க்க

திருத்தப்பட்டது தனியாா் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 மாணவிகள், ஓட்டுநா் காயம்!

அரவக்குறிச்சி அருகே சனிக்கிழமை தனியாா் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 மாணவிகள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.அரவக்குறிச்சி அருகே செயல்பட்டுவரும் தனியாா் கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல... மேலும் பார்க்க