சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பகைவென்றி கிராமத்தைச் சோ்ந்த கேசவன் மகன் ஹரீஸ் (19). இவா் மானாமதுரையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மெக்கானிக் பயிற்சி பெற்று வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல, பயிற்சியை முடித்து விட்டு வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.
மேலப்பெருங்கரை நான்கு வழிச் சாலையில் வந்த போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரது வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஹரீஸ் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து பாா்த்திப னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.