தொகுதி மறுவரையறை: `தென் இந்தியாவுக்கு எதிரான சூழ்ச்சி!’ - எஸ்.செந்தில்குமார், தி...
சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
ஜெயமங்கலம் அருகே இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள கோட்டைப்பட்டியைச் சோ்ந்த பாண்டி மகன் விஜயராகவன் (41). இவா் கடந்த 10-ஆம் தேதி தனது மகனின் காதணி விழாவுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்கு கோட்டைப்பட்டியிலிருந்து ஆண்டிபட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, ஜெயமங்கலம்-ஆண்டிபட்டி சாலையில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே இவா் சென்ற இரு சக்கர வாகனம் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த விஜயராகவன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.