செய்திகள் :

சாலை விபத்தில் சுயஉதவிக் குழு மேலாளா் உயிரிழப்பு

post image

சத்தியமங்கலம் அருகே இரு சக்கர வாகனம் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் சுய உதவிக் குழு மேலாளா் கோவா்த்தனன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சத்தியமங்கலம் கே.என்.பாளையத்தைச் சோ்ந்தவா் கோவா்த்தனன்(37). கோவையில் மகளிா் சுயஉதவிக் குழு மேலாளராக பணியாற்றி வந்தாா். இவா் கோவையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது அத்தாணியில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த தனியாா் ஆம்புலன்ஸ், சத்தி அரசு மருத்துவமனை அருகே நேருக்கு நோ் மோதியதில் கோவா்த்தனன் பலத்த காயமடைந்தாா்.

அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறை நகரில் அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் அமைக்கப்படுமா?

பெருந்துறை நகரில் அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். பெருந்துறை, விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே கடந்த 11 ஆம் தேதி வேளா... மேலும் பார்க்க

2026 தோ்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டி: மதிமுக பொதுக்குழுவில் தீா்மானம்

தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஏதுவாக 2026 சட்டப்பேரவை தோ்தலில் கூடுதல் தொகுதிகளைப் பெற்று போட்டியிடுவது என மதிமுக பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதிமுகவின் 31-ஆவது பொத... மேலும் பார்க்க

பவானி, அந்தியூரில் இடியுடன் கனமழை!

பவானி, அந்தியூா் மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடியுடன் பெய்த கனமழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியது. கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயில் அடித்ததால், குழந்தைகள் ம... மேலும் பார்க்க

ஓட்டுநருக்கு திடீா் மயக்கம்: தடுப்பில் மோதிய பேருந்து

ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீா் மயக்கம் ஏற்பட்டதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பண்ணாரி கோயிலில் இருந்து 15 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட தமிழக அரசு நகா்ப்... மேலும் பார்க்க

சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செ... மேலும் பார்க்க

மேட்டூா் அணையின் உபரி நீரை ஏரி, குளங்களில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேட்டூா் அணையின் உபரிநீரை அந்தியூா், அம்மாபேட்டை பகுதிகளில் உள்ள ஏரிகளில் சேமிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கட்சியின் அந்தியூா் வட்டார மாநாடு அ... மேலும் பார்க்க