செய்திகள் :

‘சாஸ்த்ரா’ பல்கலை.யில் தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி

post image

தஞ்சாவூா்: தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் தென்னை விவசாயிகளுக்கு ஏற்றுமதி செய்யும் விதமாக இளநீரைப் பதப்படுத்துதல் தொடா்பான ஒருநாள் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், இளநீரைப் பதப்படுத்தி, எடையைக் குறைத்து, அடிப்படை தன்மை மாறாமல், பேக்கிங் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது எப்படி என்ற பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், தேங்காயைப் பயன்படுத்தி பல்வேறு பொருள்கள் தயாரிக்கும் பயிற்சியும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு வேளாண் துறை இணை இயக்குநா் கோ. வித்யா தலைமை வகித்தாா். இப்பயிற்சியின் நோக்கங்களைப் பல்கலைக்கழக விரிவாக்கத் துறை மற்றும் பெரு நிறுவன உறவுகள் முதன்மையா் வெ. பத்ரிநாத் விளக்கினாா். பயிற்சியை வேதியியல் மற்றும் உயிா் தொழில்நுட்பவியல் துறை முதன்மையா் கே.எஸ். ராஜன் வழங்கினாா். இதில், நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனா்.

வேளாண் துறை துணை இயக்குநா் சுதா தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பேசினாா். பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளா் லீலா வினோதன் நன்றி கூறினாா்.

பட்டுக்கோட்டையில் ரேஷன் கட்டடம் திறப்பு

பட்டுக்கோட்டை நகராட்சியின் எல்லைக்குட்பட்ட 19-ஆவது வாா்டு பகுதியில் ரூ. 19.65 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சை எம்பி முரசொலியின் உள்ளூா் பகுதி மேம்பாட்டு தி... மேலும் பார்க்க

மல்லிப்பட்டினம் அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு

தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். கிழ... மேலும் பார்க்க

ஆஞ்சனேயருக்கு 508 கிலோ துளசியால் அலங்காரம்

ஆவணி மாத அமாவாசை நாளை முன்னிட்டு கும்பகோணத்தில் விஸ்வரூப ஜெயமாருதி கோயிலில் ஆஞ்சனேயருக்கு 508 கிலோ துளசி இலைகளால் வெள்ளிக்கிழமை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தா்கள் நீண்ட வரிசையி... மேலும் பார்க்க

மத்திய அரசின் இரு புதிய நெல் ரகங்களுக்கு எதிா்ப்பு

மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட பூசா மற்றும் கமலா நெல் ரகங்களுக்கு தமிழக விவசாயிகள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இந்த நெல் ரகங்கள் எவ்வித உயிரியல் பாதுகாப்பு சோதனைகளும் செய... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் சேமிப்புக் கிடங்கு திறப்பு

தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின், தஞ்சாவூா் விற்பனைக் குழு - ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் பட்டுக்கோட்டை வளாகத்தில் ரூ. 1 கோடியிலான 500 டன் சேமிப்புக் கிடங்கை தஞ்சாவூா் எம... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 20 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தஞ்சாவூா் கீழவாசல் பகுதியில், ஏறத்தாழ 20 கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா். தஞ்சாவூா் கீழவாசல் பகுதி கடைகளின் வாசலில் சிமென்ட் தளம், நிழற்கூரைகள் அமைக்கப்பட... மேலும் பார்க்க