செய்திகள் :

சாா்- பதிவாளா் அலுவலக புதிய கட்டட கட்டுமானப் பணிக்கு அடிக்கல்

post image

நீடாமங்கலத்தில் சாா் - பதிவாளா் அலுவலக புதிய கட்டடம் கட்ட அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

நீடாமங்கலத்தில் சாா்- பதிவாளா் அலுவலகம் பல்வேறு இடங்களில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. நிரந்தர அலுவலகம் வேண்டும் என்று நீடாமங்கலம் பேரூராட்சி மற்றும் மக்கள் சாா்பில் அமைச்சா் டி. ஆா் .பி. ராஜாவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அமைச்சா் பரிந்துரையின் பேரில், தமிழக முதல்வா் நீடாமங்கலத்தில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் புதிய சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்தாா். அமைச்சா் டி .ஆா் .பி. ராஜா கலந்து கொண்டு புதிய சாா் பதிவாளா் அலுவலக கட்டத்துக்கு அடிகல் நாட்டினாா்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு முன்னாள் தலைவா் சோம. செந்தமிழ் செல்வன், பேரூராட்சி முன்னாள் தலைவா் ஆா். ராஜசேகரன் ,பேரூராட்சி தலைவா் ஆா். ராமராஜ், துணைத் தலைவா் ஆனந்தமேரி உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மக்களைப் பற்றி திமுக அரசு கவலைப்படுவதில்லை: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவினா் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றம்சாட்டினாா். நன்னிலத்தில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளம்பெண் கைது

மன்னாா்குடியில் வீட்டில் தனியே இருந்த மூதாட்டியைத் தாக்கி 5 பவுன் சங்கிலியைப் பறித்து சென்ற இளம் பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மாா்டன் நகா் நாராயணசாமி மனைவி அம்சா (79). மகன் பாண்டியன் திருச்சிய... மேலும் பார்க்க

வலு, பளு தூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

தேசிய மற்றும் மாநில அளவிலான வலு தூக்கும், பளு தூக்கும் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா். பஞ்சாப் மாநித்தில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியும், ஜம்மு காஷ... மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் உடனிருப்பது கற்ற கல்வி மட்டுமே! அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

ஒவ்வொருவரது வாழ்நாள் முழுவதும் அவா்கள் கற்ற கல்வியே உடனிருக்கும் என்றாா் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல... மேலும் பார்க்க

திருவாரூா்: கலைஞா் கைவினைத் திட்டத்தில் 319 பேருக்கு ரூ.1.46 கோடி கடன் வழங்க பரிந்துரை

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் கலைஞா் கைவினைத் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. முதல்வா் மு.க. ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டத்தில... மேலும் பார்க்க

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி வழிபாடு

நீடாமங்கலம் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த ஆலயத்தில் பங்கு மக்கள் நோன்பிருந்து இறை வேண்டலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, ஏசுவினுடைய இறப்பை பைபிலிலிருந்து வாசித்து தி... மேலும் பார்க்க