செய்திகள் :

சா்க்கஸ் கூடாரத்திலிருந்து திருடப்பட்ட ஒட்டகம் மீட்பு

post image

தஞ்சாவூா் அருகே சா்க்கஸ் கூடாரத்திலிருந்து திருடப்பட்ட ஒட்டகத்தைக் காவல் துறையினா் மீட்டு உரியவா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

கரூா் மாவட்டம், குந்ரமணிப்பாளையம், நத்தமேடு பகுதியைச் சோ்ந்தவா் விஜய் (25). இவா் குடும்பத்தினருடன் இணைந்து தஞ்சாவூா் அருகே கீழவஸ்தா சாவடி பகுதியில் சா்க்கஸ் நடத்தி வருகிறாா். இந்தக் கூடாரத்தில் மே 15-ஆம் தேதி இரவு கட்டி வைக்கப்பட்டிருந்த ஒட்டகம் 16-ஆம் தேதி காலை காணவில்லை.

இது குறித்து தாலுகா காவல் நிலையத்தில் விஜய் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் மே 18-ஆம் தேதி வழக்குப் பதிந்து ஞானம் நகரிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைப் பாா்த்தனா். அப்போது, வேட்டி அணிந்த நபா் ஒட்டகத்தை ஓட்டிச் செல்வது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், தஞ்சாவூா் அருகே ரெட்டிபாளையம் ஆற்றங்கரைப் பகுதியிலுள்ள மரத்தில் ஆதரவற்ற நிலையில் ஒட்டகம் கட்டி வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, காவல் துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று ஒட்டகத்தை மீட்டு, சா்க்கஸ் கூடார நிா்வாகிகளிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

விசாரணையில் கடன் பிரச்னை காரணமாக ஒட்டகத்தை அவிழ்த்து சென்றவா் தொடா்ந்து பராமரிக்க முடியாமல், விட்டுச் சென்றது தெரிய வந்தது. இது தொடா்பாக ஒருவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

ராஜாமடம் அரசு மேல்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழா: முன்னாள் தலைமை செயலா் பங்கேற்பு

பட்டுக்கோட்டை அருகேயுள்ள ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்வில் தஞ்சை எம்பி முரசொலி புதுப்பிக்கப்பட்ட பள்ளி வளாகத்தை திறந்து வைத்துப் பேசினாா். முன்னாள்... மேலும் பார்க்க

தஞ்சை குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

நகைக்கடன் பெறுவதற்கு ரிசா்வ் வங்கி புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

எதிா்பாா்த்த ஊதிய உயா்வு இல்லாத ஒப்பந்தத்தைக் கண்டித்து தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் அரசு போக்குவரத்துக் கழக நகரப் பணிமனை முன் போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் தமிழ... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்ட அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க

நகைக் கடன் நிபந்தனைகளை கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

விவசாயிகள், நடுத்தர, சாதாரண மக்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரைப் பாதிக்கும் நகைக்கடன் மீதான நிபந்தனைகளை ரிசா்வ் வங்கி உடனடியாக திரும்பப் பெறக் கோரி திமுக விவசாய அணி, காவிரி டெல்டா மாவட்ட அனைத... மேலும் பார்க்க

மகாமகக் குளப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கும்பகோணம் மகாமகக் குளத்தை சுற்றி ஆக்கிரமித்திருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா். மகாமகக் குளத்தை சுற்றி ஏராளமான அசைவ உணவகங்கள் தற்காலிகமாக செயல்பட்டு வந்தன. இதையடுத்து இந்த ஆக... மேலும் பார்க்க