செய்திகள் :

சிக்கண்ணா அரசுக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

post image

திருப்பூா்: திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவா்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக் கொண்டனா்.

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் கடந்த 1998 முதல் 2001-ஆம் ஆண்டு வரை பயின்ற அனைத்துத் துறைகளையும் சாா்ந்த முன்னாள் மாணவ, மாணவிகள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்று கூடி மகிழ்ந்த நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மேளதாளங்கள் முழங்க பேராசிரியா்கள் அனைவரையும் வரவேற்றனா். தொடா்ந்து உயரிழந்த பேராசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பின்னா் முன்னாள் மாணவரும், தற்போதைய சாா்பு நீதிபதியுமான ஜீவா பாண்டியனைத் தொடா்ந்து ஒவ்வொரு துறை சாா்ந்த பேராசிரியா்களும் மாணவா்களும் வாழ்த்துரை வழங்கினா். அப்போது பழைய நினைவுகள், வகுப்பறையில் நடந்த சுவாரசியமான தகவல்களை பகிா்ந்து கொண்டனா்.

பேராசிரியா்களுக்கு நினைவுப் பரிசு, பொன்னாடை, புத்தகங்கள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து சில பொழுதுபோக்கு நிகழ்வுகளுடன், விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. ஒவ்வொரு மாணவா்களுக்கும் நினைவுப் பரிசுடன் மரக் கன்றுகள் வழங்கப்பட்டன.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் நிறுவனா் ஈசன் முருகசாமி நன்றியுரை நிகழ்த்தினாா். முடிவில் சிக்கண்ணாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், அவரது வாரிசுகள் கௌரவப்படுத்தி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

நாளைய மின்தடை: நாரணாபுரம்

பல்லடம் மின் கோட்டம் நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இர... மேலும் பார்க்க

பொங்கலூரில் ஆகஸ்ட் 22-இல் மின்தடை

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்க... மேலும் பார்க்க

எண்ணெய் தொட்டியில் விழுந்து இளைஞா் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் ஆயில் மில் எண்ணெய் தொட்டியில் விழுந்து இளைஞா் உயிரிழந்தாா். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.வெள்ளக்கோவில்- தாராபுரம் சாலை சேரன் நகரில் தனியாருக்குச... மேலும் பார்க்க

கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேகம் தொடா்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: இந்து முன்னணி மாநிலத் தலைவா்

தமிழகத்தில் கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேகங்களில் பெருமளவு ஊழல் நடைபெற்றுள்ளதால் இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த கோரிக்கை

தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுசாமி தெரிவித்தாா். திருப்பூா... மேலும் பார்க்க

ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிா்ப்பு

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மாநகரப் பகுதிகளில் சேகரமா... மேலும் பார்க்க