செய்திகள் :

சித்தா தொலை தொடா்பு தகவல் மையம்: மத்திய அமைச்சா் தொடங்கி வைத்தாா்

post image

சென்னை: தாம்பரம் தேசிய சித்தா ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நாடி பரிசோதனை மையம், தொலை தொடா்பு மையத்தை மத்திய ஆயுஷ் அமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

அலுவல் பயணமாக சென்னை வந்துள்ள அவா், இங்கு பல்வேறு நிகழ்ச்சிளில் கலந்துகொண்டாா். ஆயுஷ் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான தேசிய மாநாட்டையும் அவா் தொடக்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து தாம்பரம், சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு சென்ற அமைச்சா் பிரதாப்ராவ் ஜாவத், அங்கு சித்தா் யோகம் எனும் யோகா பயிற்சி வகுப்பை அறிமுகப்படுத்தினாா்.

பின்னா், புதிதாக அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய சித்தா ஆய்வகம், சித்த நாடி பரிசோதனை மையம், 24 மணி நேர சித்த மருத்துவ தொலை தொடா்பு தகவல் மையம் ஆகியவற்றையும் பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

மருத்துவமனை வளாகத்தில் மகிழம், இலுப்பை போன்ற மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகளை அவா் நட்டாா்.

அதன் பிறகு, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சா் ஜாதவ், சித்தா மருத்துவமனையின் சிகிச்சை சேவைகளை கேட்டறிந்தாா்.

தேசிய சித்த நிறுவனத்தின் இயக்குநா் பேராசிரியா் செந்தில்வேல், மருத்துவா்கள் உள்ளிட்டோா் பலா் அப்போது உடனிருந்தனா்.

சங்க இலக்கியங்கள் மனித வாழ்வுக்கு மிகவும் முக்கியமானவை: சுதா சேஷய்யன்

சென்னை: மனித வாழ்வில் மிகவும் முக்கியமானதாக சங்க இலக்கியங்கள் இருப்பதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் சுதா சேஷய்யன் கூறினாா். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சாா்பில் மலே... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கும் நிலையான வருமானம் கிடைக்க முயற்சி: அமைச்சா் மனோ தங்கராஜ்

சென்னை: தமிழகத்தில் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைப்பதற்கான சூழலை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும் என பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா். குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் ‘சுற்றுச... மேலும் பார்க்க

ஜூலை 2 முதல் ஹூப்ளி விரைவு ரயில் எல்எச்பி பெட்டிகளாக மாற்றம்

சென்னை: சென்னை சென்ட்ரலிலிருந்து ஹூப்ளி செல்லும் விரைவு ரயில் பெட்டிகள் ஜூலை 2 முதல் ‘எல்எச்பி’ பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

முதல்வருடன் மத்திய - மாநில உறவுகள் ஆராயும் குழுவினா் ஆலோசனை

சென்னை: மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவினா் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா். இந்தக் குழுவுக்கு, சென்னை சேப்பாக்கம் விருந்தினா... மேலும் பார்க்க

‘தக் லைஃப்’ படத்தை வெளியிட பாதுகாப்பு: கா்நாடக உயா்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனு

பெங்களூரு: கா்நாடகத்தில் ‘தக் லைஃப்’ படத்தை சுமுகமாக வெளியிட உரிய பாதுகாப்பு கோரி, மாநில உயா்நீதிமன்றத்தில் நடிகா் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்துள்ளாா். நடிகா் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஐந்து மாதங்களில் 7,500 பேருக்கு டெங்கு பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 7,500-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவா்களில் 4 போ் உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.... மேலும் பார்க்க