செய்திகள் :

சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு: 17 ஆண்டுகளுக்குப் பின் கோலாகலம்; குவிந்த பக்தர்கள்

post image

தேனி மாவட்டம் சின்னமனூரில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமி அம்மன் கோயில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் கட்டுமானத்துக்குச் சிவப்பு நிற பாறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோயில் திருப்பணி செய்த குலசேகர பாண்டியனின் பெயர் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.

பூலாநந்தீஸ்வரர் ஆலயம்

கோயில் வளாகத்திற்குள் பூலாநந்தீஸ்வரரைச் சுற்றி விநாயகர், முருகன், தண்டபாணி, வள்ளி தெய்வானையுடன் சண்முகர், 63 நாயன்மார்கள், ஜுரத்தைப் போக்கக்கூடிய சக்தி கொண்ட சுரகர தேவர், நடராஜ பெருமாள், மகாலட்சுமி, சரஸ்வதி, துர்க்கை, கன்னீஸ்வரமுடையார் உள்ளிட்ட கடவுள்கள் உள்ளனர். பூலாநந்தீஸ்வரரை எங்கிருந்து பார்த்தாலும் பார்ப்பவரின் அளவுக்குத் தகுந்தபடி காட்சியளிப்பார். பெரியவர்கள் பார்த்தால் அவர்களின் உயரத்திற்கு ஏற்றார்போல காட்சியளிப்பார், சிறியவர்கள் பார்த்தால் அவர்களின் உயரத்திற்கு ஏற்றார்போல காட்சியளிப்பார்.

பக்தர்கள் கூட்டம்
பக்தர்கள் கூட்டம்

மதுரையில் நடக்கும் திருவிழாவைப் போல இங்கும் வெகு விமர்சியாக நடக்கும். மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண நாளில் இங்கும் திருக்கல்யாணம் நடக்கும். கொடியேற்றத்தில் தொடங்கித் தேர்த் திருவிழா, திருக்கல்யாணம் போன்றவை மிகவும் முக்கியமானவை.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது. இதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் உபயதாரர்கள் மூலமாகத் திருப்பணிகள் நடந்தன. தமிழகத்தில் பழமையான கோயில்களில் ஒன்றான பூலாநந்தீஸ்வரர் கோயிலின் அமைப்பே காண்போரைக் கவரும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மகா கும்பாபிஷேக விழா பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கியது. மூன்று பெரிய யாகசாலைகளும், 16 சிறிய யாக சாலைகளும் அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.

கலச நீர் ஊற்றும் நிகழ்வு

இன்று காலை ஆறு கால யாக பூஜைகளைத் தொடர்ந்து 9.15 மணிக்குக் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், பைரவர், நவக்கிரகம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

``பல தலைமுறைகளாக இந்த பந்தம்..." -புன்னை நல்லூர் மாரியம்மனுக்கு சீர்வரிசை அளித்த இஸ்லாமியர்கள்!

தஞ்சாவூரில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ள புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. புன்னை மரக்காட்டில் மூலஸ்தான மகமாயியான மாரியம்மன் புற்று மண்ணால் உருவானதாக ஐதீகம். இதனால் மூலஸ... மேலும் பார்க்க

தைப்பூசம்: பழநிக்கு படையெடுக்கும் முருக பக்தர்கள்... இன்று திருக்கல்யாணம்; நாளை தேரோட்டம்..!

தமிழகத்தில் முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்று மூன்றாம்படை வீடான பழநி முருகன் கோயில். இங்கு ஆண்தோறும் தைப்பூசம் விழா வெகுவிமர்சியாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்... மேலும் பார்க்க

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை கடைசி வெள்ளி திருவிழா -நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பக்தர்கள்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். குறிப்பாக ... மேலும் பார்க்க

தோரணமலை தைப்பூசம்: உங்கள் வேண்டுதல்கள் யாவையும் நிறைவேற்றி வைக்கும் முருக வழிபாடு! சங்கல்பியுங்கள்

தோரணமலை தைப்பூசம்: உங்கள் வேண்டுதல்கள் யாவையும் நிறைவேற்றி வைக்கும் முருக வழிபாடு! சங்கல்பியுங்கள்! 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள்... மேலும் பார்க்க

எல்லாப் பிணியும் நில்லாதோட... தோரணமலை தைப்பூசம்! விரும்பிய வாழ்க்கை உடனே அமைய சங்கல்பியுங்கள்!

எல்லாப் பிணியும் நில்லாதோட தோரணமலை தைப்பூசம்! விரும்பிய வாழ்க்கை உடனே அமைய சங்கல்பியுங்கள்! வரும் 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் ந... மேலும் பார்க்க

ரூ.6 கோடி மதிப்பு.. 6.8 கிலோ தங்கத்தில் கன்னியாகுமரி அம்மன் விக்கிரகம்- அர்ப்பணித்த கேரள தொழிலதிபர்!

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோயில் வரலாற்று சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும். கன்னியாகுமரி பகவதி அம்மனின் ஒளிவீசும் மூக்குத்திக்கு என தனி முக்கியத்துவம் உ... மேலும் பார்க்க