செய்திகள் :

தைப்பூசம்: பழநிக்கு படையெடுக்கும் முருக பக்தர்கள்... இன்று திருக்கல்யாணம்; நாளை தேரோட்டம்..!

post image

தமிழகத்தில் முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்று மூன்றாம்படை வீடான பழநி முருகன் கோயில். இங்கு ஆண்தோறும் தைப்பூசம் விழா வெகுவிமர்சியாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூசத் விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று திருக்கல்யாணமும், நாளை தேரோட்டமும் நடைபெற உள்ளது.

அடிவாரத்தில் காத்திருந்த பக்தர்கள்

பழநியில் கடந்த 5 ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று வெள்ளி யானை வாகனத்தில் முத்துக்குமார சுவாமி புறப்பாடு நிகழ்வு நடந்தது. ஆறாம் நாள் நிகழ்வாக இன்று காலை 9.15 மணிக்கு தந்த பல்லக்கில் புறப்பாடு நடக்கிறது. இதையடுத்து இரவு 7 முதல் 8.30 மணிக்குள் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இரவு 9 மணிக்கு மேல் ரதவீதிகளில் வெள்ளி தேரோட்டம் நடக்கவுள்ளது.

நாளை காலை தோளுக்கினியாள் சண்முகாநதியில் எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்வு நடக்கும். காலை 11.15 -12 மணிக்குள் சுவாமி தேரில் எழுந்தருள்வார். மாலை 4.45 மணிக்கு தைப்பூசத் தேர் வடம் பிடித்து தேரோட்டம் ரதவீதிகளில் நடக்கும். பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்றைய இரவு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

பாதுகாப்பு பணியில் போலீஸார்

இதையொட்டி பழநிக்கு முருக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் 5 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பாதுகாப்பு பணிக்காக 3 ஆயிரம போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பழநி கோயில் அடிவாரம், கிரிவலப் பாதை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 12 இடங்களில் தற்காலிக பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு: 17 ஆண்டுகளுக்குப் பின் கோலாகலம்; குவிந்த பக்தர்கள்

தேனி மாவட்டம் சின்னமனூரில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமி அம்மன் கோயில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் கட்டுமானத்துக்குச் சிவப்பு நிற பாறைகள் பயன்பட... மேலும் பார்க்க

``பல தலைமுறைகளாக இந்த பந்தம்..." -புன்னை நல்லூர் மாரியம்மனுக்கு சீர்வரிசை அளித்த இஸ்லாமியர்கள்!

தஞ்சாவூரில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ள புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. புன்னை மரக்காட்டில் மூலஸ்தான மகமாயியான மாரியம்மன் புற்று மண்ணால் உருவானதாக ஐதீகம். இதனால் மூலஸ... மேலும் பார்க்க

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை கடைசி வெள்ளி திருவிழா -நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பக்தர்கள்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். குறிப்பாக ... மேலும் பார்க்க

தோரணமலை தைப்பூசம்: உங்கள் வேண்டுதல்கள் யாவையும் நிறைவேற்றி வைக்கும் முருக வழிபாடு! சங்கல்பியுங்கள்

தோரணமலை தைப்பூசம்: உங்கள் வேண்டுதல்கள் யாவையும் நிறைவேற்றி வைக்கும் முருக வழிபாடு! சங்கல்பியுங்கள்! 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள்... மேலும் பார்க்க

எல்லாப் பிணியும் நில்லாதோட... தோரணமலை தைப்பூசம்! விரும்பிய வாழ்க்கை உடனே அமைய சங்கல்பியுங்கள்!

எல்லாப் பிணியும் நில்லாதோட தோரணமலை தைப்பூசம்! விரும்பிய வாழ்க்கை உடனே அமைய சங்கல்பியுங்கள்! வரும் 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் ந... மேலும் பார்க்க

ரூ.6 கோடி மதிப்பு.. 6.8 கிலோ தங்கத்தில் கன்னியாகுமரி அம்மன் விக்கிரகம்- அர்ப்பணித்த கேரள தொழிலதிபர்!

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோயில் வரலாற்று சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும். கன்னியாகுமரி பகவதி அம்மனின் ஒளிவீசும் மூக்குத்திக்கு என தனி முக்கியத்துவம் உ... மேலும் பார்க்க