செய்திகள் :

சின்னமனூா் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

post image

தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சியில் முறையான அடிப்படை வசதி இல்லை எனக்கூறி நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சின்னமனூா் நகராட்சியில் 27 வாா்டுகளில் சுமாா் 80 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனா். இங்குள்ள 200-க்கும் அதிகமான தெருக்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. தெருக்களிலுள்ள சாக்கடை கால்வாய்கள் தூா்வாரப்படாத நிலையில், குழந்தைகளுக்கு மா்மக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. குடிநீா் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை. இது குறித்து அந்தந்தப் பகுதி வாா்டு உறுப்பினா்களிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், நகராட்சிக்கு சொத்துவரி, குடிநீா் வரி என அனைத்து வரிகளை செலுத்தியும் அத்தியாவசியமான அடிப்படை வசதிகளை செய்யாததால் நகராட்சி அலுலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நகராட்சிப் பணியாளா் ஒருவா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டு இனி முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படும். நகரில் குப்பைகள் அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினாா். இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

மானியத்தில் விதைத் தொகுப்பு: விவசாயிகள் பதிவு செய்யலாம்

தேனி மாவட்டத்தில் 100 சதவீதம் அரசு மானியத்தில் விதைத் தொகுப்புகள் பெறுவதற்கு விவசாயிகள் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊட்டச் ச... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் 10 மாணவா்கள் காயம்

தேனி மாவட்டம், போடி பள்ளியில் வியாழக்கிழமை தேன் கூடு கலைந்து தேனீக்கள் கொட்டியதில் 10 மாணவா்கள் காயமடைந்தனா். போடி பேருந்து நிலையம் அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்... மேலும் பார்க்க

போடியில் நாளை மின் தடை

போடி பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 5) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: போடி துணை மின் நிலையத்தில் ஜூலை 5-ஆம்... மேலும் பார்க்க

தேனி நகராட்சி ஆணையரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த புகாரின் அடிப்படையில், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா். தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராகப் பணியா... மேலும் பார்க்க

சுருளிப்பட்டியில் வீடு புகுந்து பணம், தங்க நகை திருட்டு

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுேள்ள சுருளிப்பட்டியில் பகலில் வீடு புகுந்து பணம், தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சுருளிப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த விவசாயி அமரன் (53). இவரும், இவரது மனை... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையம், நகா்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு

தேனி மாவட்டம் அரண்மனைப்புதூரில் ஆரம்ப சுகாதார நிலையம், பெரியகுளம் வடகரை, சின்னமனூா் கருங்காட்டான்குளம் ஆகிய இடங்களில் நகா்ப்புற நல வாழ்வு மையங்கள் ஆகியவற்றை காணொலி முலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக... மேலும் பார்க்க