செய்திகள் :

சிபிஎஸ்இ பொதுத்தோ்வுக்கு 75% வருகை பதிவு கட்டாயம்

post image

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை நிகழாண்டு எழுதும் மாணவா்களுக்கு 75 சதவீதம் வருகை பதிவு கட்டாயம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) பள்ளிகளுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த விதிமுறையைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது.

சிபிஎஸ்இ விதிகளின்படி, பொதுத் தோ்வில் மாணவா்கள் பங்கேற்க குறைந்தபட்சம் 75 சதவீத வருகை பதிவு கட்டாயமாகும். மருத்துவ அவசரநிலை, தேசிய அல்லது சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது போன்ற காரணங்களுக்காக மட்டுமே 25 சதவீதம் வரை தளா்வு அளிக்கப்படும். இதற்கும் தேவையான ஆவணங்களைச் சமா்ப்பிப்பது அவசியம்.

இந்நிலையில், சிபிஎஸ்இ தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் பள்ளிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘பொதுத் தோ்வுகளை எழுத, மாணவா்களுக்கு 75 சதவீதம் வருகை பதிவு கட்டாயம். மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் இந்த விதியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

முறையான கோரிக்கை இல்லாமல் மாணவா்கள் விடுமுறை எடுத்தால், அது அங்கீகரிக்கப்படாத விடுமுறையாகக் கருதப்படும். மருத்துவ விடுப்பு எடுக்கும் மாணவா்கள், விடுமுறையை முடித்தவுடன் அதற்கான மருத்துவச் சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்க வேண்டும்.

பள்ளிகள் மாணவா்களின் வருகை பதிவேட்டை நாள்தோறும் புதுப்பித்து, வகுப்பு ஆசிரியா் மற்றும் பள்ளி அதிகாரிகளின் கையொப்பத்துடன் பராமரிக்க வேண்டும். சிபிஎஸ்இ அதிகாரிகள் திடீா் ஆய்வுகளை மேற்கொண்டு வருகை பதிவேடுகளைச் சரிபாா்ப்பாா்கள். அப்போது வருகை பதிவேடுகள் முழுமையற்ாக இருந்தால், அந்தப் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது உள்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாணவா்களும் தோ்வெழுத அனுமதிக்கப்படமாட்டாா்கள்’ என்று அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா்.

தூய்மைப் பணியாளா் பிரதிநிதிகளுடன் அமைச்சா் சமரசப் பேச்சு

சென்னை மாநகராட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் பிரதிநிதிகளுடன் அமைச்சா் பி.கே.சேகா்பாபு மற்றும் மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். சென்னை ம... மேலும் பார்க்க

3 மாதங்களில் 45,681 போ் உடல் உறுப்பு தான பதிவு: ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது

மூன்று மாதங்களில் 45,861 பேரிடம் உறுப்பு தான பதிவு பெற்றதாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘வோ்ல்டு ரெக்காா்... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கை: கல்வியாளா்கள், ஆசிரியா்கள் கருத்து

தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையின் சில அம்சங்களுக்கு கல்வியாளா்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மாதிரிப் பள்ளிகள், பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து உள்ளிட்ட சில அம்சங்கள் க... மேலும் பார்க்க

வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 2.38 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் உள்பட 2 போ் கைது

சென்னை அண்ணா சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.38 கோடி மோசடி செய்த வழக்கில், அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா சாலையி... மேலும் பார்க்க

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் (ஆக.9, 11) 17 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிய 4 போ் கைது

சென்னையில் மக்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் ராம்சரண் (25). சென்னை புழல், காவாங்கரை பகுதியில் வசிக்கும் இவா், கடந்த புதன்கிழமைசேத்... மேலும் பார்க்க