செய்திகள் :

"சிபில் ஸ்கோர் எனும் சித்ரவதையிலிருந்து இந்தியர்களை காப்பாற்ற வேண்டும்" - சு.வெங்கடேசன் எம்.பி

post image

"சிபில் என்பது ஒரு பாரபட்சமான நடைமுறை. இது ஏழை எளிய மக்களுக்கு அரசு நிறுவனங்களில் இருந்து கடன் கிடைப்பதை தடுக்கும் ஒரு செயல்முறை. இதை கையாள்வது பன்னாட்டு கம்பெனி..." என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

சு.வெங்கடேசன்

சமீபகாலமாக வங்கிகளில் நகைக்கடன், விவசாயக் கடனுக்கெல்லாம் சிபில் மதிப்பெண் அடிப்படையில் கடன் வழங்க தகுதி பார்க்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்,

இது குறித்து சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிபில் ஸ்கோரை தீர்மானிப்பது 'சிபில் டிரான்ஸ் யூனியன்' என்ற அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனம். இதுவே 60 கோடி இந்தியர்கள் மற்றும் 2.5 கோடி சிறு குறு நிறுவனங்களின் கடன் பெறும் தகுதியை தீர்மானிக்கிறது.

சிபிலின் நடைமுறை வெளிப்படைத்தன்மை அற்றது, உயர்வான மதிப்பெண் பெற பல்வேறு நடைமுறைப்படுத்த முடியாத நிபந்தனைகளை விதிக்கிறது.

ஒரே ஒரு தவணை தவறினாலும் சிபில் ஸ்கோர் குறையும். சமரச ஒப்பந்தம் போட்டு சிறிது அளவு வட்டி சலுகை உடன் கடனை அடைத்தாலும் சிபில் ஸ்கோர் குறையும். கடன் அட்டைகளில் 30 சதவீதத்திற்கு மேல் பயன்படுத்தினால் சிபில் ஸ்கோர் குறையும்.

எது கூடுதலான சலுகை உள்ள வங்கி என்று தெரிந்து கொள்வதற்காக ஒருவர் இரண்டு மூன்று வங்கிகளில் கடனுக்காக விண்ணப்பித்தால் சிபில் ஸ்கோர் குறையும்.

சிபில் ஸ்கோர்

சிபில் ஸ்கோர் குறைந்தது 300, அதிகம் 900. ஆனால் கடனே வாங்காதவருக்கு மைனஸ் ஒன், பூஜ்யம் என்று ஸ்கோர் வரும். அப்படியே அவருக்கு கடன் கிடைத்தாலும் வட்டி அதிகம் ஆகும்.

கடன் வாங்கியவரின் சிபில் ஸ்கோர் ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்யப்பட்டு அதற்கேற்ற போல் வட்டி மாறும். பெரும்பாலான கடனாளிகளின் வட்டி கூடுதலாகும். 800 என்பதுதான் ஆகச்சிறந்த ஸ்கோர். அதை பெரும்பாலானவர்களால் அடையவே முடியாது.

கல்விக் கடன் பெறுவதற்கு மாணவர்களும், பெற்றோர்களும் படும் துயரத்துக்கு அடிப்படையாக பலநேரம் இருப்பது சிபில் ஸ்கோர். கடனே வாங்காத நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கியதாக சிபில் ஸ்கோர் வருகிறது. ஆனால், அதை நேர் செய்வது மிகவும் கடினமான வேலை, சிபிலின் நடைமுறையே கேள்விக்குறிய ஒரு விஷயம்.

இது எதுவும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கிடையாது. வேண்டுமென்றே பணத்தை திருப்பிக் கட்டாத wilful defaulter கடனை, தள்ளுபடி போக ஏதோ ஒரு தொகை, செலுத்தினாலும், ஒரு வருடம் கழித்து அவருக்கு மீண்டும் கடன் கிடைக்கும்.

2002 வரை ரிசர்வ் வங்கிதான் கடன் வாங்குபவர்களின் மதிப்பெண்களை தீர்மானித்து வந்தது. அதற்குப் பிறகுதான் சிபில் உள்ளே நுழைந்தது.

மொத்தத்தில் சிபில் என்பது ஒரு பாரபட்சமான நடைமுறை. இது ஏழை எளிய மக்களுக்கு அரசு நிறுவனங்களில் இருந்து கடன் கிடைப்பதை தடுக்கும் ஒரு செயல்முறை. இதை கையாள்வது பன்னாட்டு கம்பெனி.

கடன் மதிப்பெண்களை சிபில் என்ற பன்னாட்டு நிறுவனம் தீர்மானிப்பது உடனடியாக கைவிடப்பட வேண்டும். முன்பு இருந்தது போல் ரிசர்வ் வங்கியே வெளிப்படைத் தன்மையோடு கடன் வாங்குபவர்களின் மதிப்பெண்களை தீர்மானிப்பதற்கும், அதில் உள்ள குறைகளை எளிதாக தீர்ப்பதற்கும் வழிவகை செய்ய வேண்டும். இத்தகைய நடைமுறை அனைவருக்கும் சமமாக கார்ப்பரேட்டுகளுக்கும் பொருந்தும்படி அமைய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Provident Fund: ஆன்லைனிலேயே ஈசியாக PF eKYC செய்யலாம்! - வழிமுறைகள் என்ன? | How to

பி.எஃப் பணம் உடனடியாக, எளிதாக சிக்கலின்றி கிடைக்க வேண்டுமா? அதற்கு KYC அப்டேட் அவசியம். இதற்காக இ.பி.எஃப்.ஓ அலுவலகத்திற்கு நடையாக நடக்க வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம். அந்த e-KYC-ஐ ஆ... மேலும் பார்க்க

அரசுப் பணியாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடு - விகடன் 'லாபம்' வழங்கும் சிறப்பு வெபினார்

ஹாய்! எப்படி இருக்கீங்க?நீங்க மாநில/மத்திய அரசுப்பணியில் இருக்கீங்களா? இல்ல அரசு வேலைக்காக முயற்சி செய்து வர்றீங்களா? அரசுப் பணியாளர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா? முதலீடு செஞ்சாலும் எது ... மேலும் பார்க்க

வெள்ளிதான் அடுத்த தங்கமா? 2025-ல் முதலீடு செய்வது எப்படி? - விகடன் லாபம் நடத்தும் இலவச வெபினார்

வெள்ளிதான் அடுத்த தங்கமா? 2025-ல் முதலீடு செய்வது எப்படி?கடந்த ஓராண்டாக தங்கத்தில் முதலீடுசெய்தவர்களுக்கு படு லாபம். ஆனால் இந்தக் கட்டுரை தங்கம் பற்றியதல்ல. வெள்ளை உலோகமான வெள்ளி பற்றியது. கடந்த சில வ... மேலும் பார்க்க

Share Market: 'பரபர பங்குச் சந்தையில் அமைதியான முதலீட்டு யுக்தி' - நாணய விகடனின் ஆன்லைன் வகுப்பு

பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளான நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் எப்போது வேண்டுமானாலும்ஏற்ற இறக்கம் இருக்கலாம்.மேலும் ஒரு பங்கை ஒரு அனலிஸ்ட் வாங்கச் சொல்வார... மேலும் பார்க்க

Investing: '25 ஆண்டுகளில், 5 கோடி ரூபாய் சேர்ப்பது எப்படி?' - கொங்கு பகுதியினருக்கான வழிகாட்டல்!

ஹாய்! எப்படி இருக்கீங்க?வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க பணம் தேவையில்லைன்னுநிறைய பேர் சொல்லுவாங்க. அவங்ககிட்ட ஒரு பணக்கட்டை நீட்டுங்க, கண்டிப்பா யாரும் வேணாம்னு சொல்லவேமாட்டாங்க. காரணம், சமூகத்தில் வாழ ... மேலும் பார்க்க

LIC: ISO 22301:2019 வணிக தொடர்ச்சி மேலாண்மை அமைப்பு சான்றிதழைப் பெற்ற எல்ஐசி நிறுவனம்

எல்ஐசி நிறுவனம், பிரிட்டிஷ் தரநிலை நிறுவனத்திடமிருந்து ISO 22301:2019 வணிக தொடர்ச்சி மேலாண்மை அமைப்பு சான்றிதழைப் பெற்றுள்ளது.முன்னணி பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் செயல்பாட்டு மீள்தன்மை, வணிக தொடர்ச... மேலும் பார்க்க