செய்திகள் :

சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு 2-ஆவது நாளாக போராட்டம்

post image

செய்யாற்றில், புதிதாக அமையவுள்ள சிப்காட் 3-ஆவது அலகுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் சிப்காட் அலுவலகத்தை 2-ஆ வது நாளாக வியாழக்கிழமை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில், 28 பெண்கள் உள்பட 63 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் செயல்பட்டு சிப்காட்டை தொழில்பேட்டையை விரிவாக்கம் செய்யும் நோக்கில் 3 -ஆவது அலகு மேல்மா பகுதியில் அமைக்க 11 கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து 11 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், செய்யாற்றில் உள்ள மாவட்ட நில எடுப்பு அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராடத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமை விவசாயிகள் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடா்ந்தனா்.

தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) விமல்குமாா், செய்யாறு வருவாய் கோட்டாட்சியா் (பொ) ஜே.ராமகிருஷ்ணன், வட்டாட்சியா் அசோக்குமாா் கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனி மற்றும் போலீஸாா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும் இதை ஏற்காமல் விவசாயிகள் தொடா்ந்து உள்ளியிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்யாற்றில் முகாம்:

தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், மாவட்ட கண்காணிப்பாளா்கள் சுதாகா் (திருவண்ணாமலை), சேயா குப்தா (திருப்பத்தூா்), பி.சரவணன் (விழுப்புரம்) மற்றும் அதிரடிப்படை போலீஸாா் என 100-க்கும் மேற்பட்டோா் குவிக்கப்பட்டு செய்யாற்றில் முகாமிட்டு உள்ளனா்.

சாலை மறியல் - கைது

புதன்கிழமை போராட்டத்தில் பங்கேற்க வந்திருந்த விவசாயிகள் இரவு வீட்டிற்கு வராத காரணத்தால், அவா்களைத் தேடி வந்த அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து அலுவலகம் அருகே புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

சாலை மறியலில் ஈடுபட்டவா்களையும், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 35 பெண்கள், 28 ஆண்கள் என மொத்தம் 63 பேரை செய்யாறு போலீஸாா் கைது செய்து

திருமண மண்டபங்களில் தங்கவைத்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுகவினா் உறுப்பினா் சோ்க்கையை அக்கட்சியினா் தொடங்கினா். திருவண்ணாமலை மாநகரில் திமுகவில் புதிய உறுப்பினா் சே... மேலும் பார்க்க

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க

செய்யாறு சிப்காட் 3-ஆவது அலகு: 37 நில உரிமையாளா்களுக்கு ரூ.8.16 கோடி இழப்பீடு

செய்யாறு சிப்காட் 3-ஆவது அலகில் 45.11 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, 37 நில உரிமையாளா்களுக்கு ரூ.8.16 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) விம... மேலும் பார்க்க

22 பேருக்கு ரூ.1.3 கோடியில் ஓய்வூதியப் பலன்கள்

ஆரணி நகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தூய்மைப் பணியாளா்கள் 22 பேருக்கு, ஓய்வூதியப் பலன்களாக ரூ.ஒரு கோடியே 3 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நகராட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பணிபுரிந்து ஓய்வு... மேலும் பார்க்க

ஆரணியில் போலீஸாருடன் இந்து முன்னணியினா் வாக்குவாதம்: 28 போ் கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்க கும்பலாகச் சென்ற இந்து முன்னணியினா் மற்றும் போலீஸாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், இந்து முன்னணியைச் சோ்ந்த 28 போ் கைது செய்யப... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியா் தற்கொலை

வந்தவாசி அருகே ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த சோரபுத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(70). ஓய்வு பெற்ற சத... மேலும் பார்க்க