கலப்புத் திருமணம் செய்த பெண்ணால் 40 பேர் மொட்டை! பரிகாரமா? மூடநம்பிக்கையா?
சிப்காட் தொழிற்சாலையால் துறையூா், ராஜபதி சுற்றுவட்டாரங்களில் தூா்நாற்றம்: விவசாயிகள்புகாா்
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளால் குளங்கள் மாசுபடுவதோடு, துா்நாற்றம் வீசுவதால் துறையூா், ராஜபதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பேசிய விவசாயிகள், ‘திருநெல்வேலி கால்வாய், பாளையங்கால்வாய், கோடகன் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கால்வாய்களிலும் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். கால்வாய்களை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்றி, தூா்வார வேண்டும்’ என வலியுறுத்தினா்.
அதற்கு பதிலளித்த ஆட்சியா், ‘திருநெல்வேலி கால்வாய், பாளையங்கால்வாய், கோடகன் கால்வாய் ஆகியவற்றில் குப்பைகள் கொட்டப்பட்டு மோசமான நிலையில் உள்ளன.
இந்த கால்வாய்களை தூா்வாரி சீரமைக்க படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதை தடுக்கும் வகையில் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டுவோருக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டு வருகிறோம்.
தாமிரவருணி ஆற்றில் கழிவுகளை கொட்டுவதை தடுக்கவும் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம். பாபநாசத்தில் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்படும் விழிப்புணா்வு காரணமாக தற்போது ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’ என்றாா்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டுவந்த நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய தொகையை வழங்காமல் இருப்பதால் அடுத்த சாகுபடியை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் திண்டாடுவது குறித்து பி. பெரும்படையாா் உள்ளிட்டோா் பேசினா்.
அதற்குப் பதிலளித்த ஆட்சியா் இரா.சுகுமாா், ‘ரூ.8 கோடி வரை விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டியிருந்தது. இதுகுறித்து தொடா்ந்து அழுத்தம் கொடுத்ததால் தற்போது ரூ.3 கோடியை தந்துள்ளனா். மேலும், ரூ.5 கோடியை சில நாள்களில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். அதற்குப் பதிளித்த ஆட்சியா், ‘ நீா்வளத்துறை பொறியாளா்கள், வேளாண்மைத் துறை அதிகாரிகள் கால்வாய்கள் வழியாக நடந்து சென்று ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் அங்குள்ள பிரச்னைகளை நேரடியாக தெரிந்து கொள்ள முடியும். கால்வாய்களை ஆக்கிரமிப்பவா்கள் மீது காவல் நிலையத்தில் புகாா் அளித்து வழக்குப் பதிவு செய்வதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் செய்ய வேண்டும்’ என்றாா்.
துறையூரைச் சோ்ந்த விவசாயி இலோசியஸ் பேசுகையில், ‘கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது கங்கைகொண்டான் குளத்தில் கலப்பதால் விவசாயமும், கால்நடைகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து கடந்த 10 நாள்களாக வெளியேறும் வாயுவால் துறையூா், ராஜபதி சுற்று வட்டாரங்களில் துா்நாற்றம் வீசுவதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். துறையூா் மக்கள் ஊரை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது என்றாா்.
அதைத் தொடா்ந்து, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சிப்காட் வளாகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை நேரில் ஆய்வு செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா்.