செய்திகள் :

சிரியாவின் இடைக்கால அரசுக்கு எச்சரிக்கை! அதிபர் மாளிகை அருகில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

post image

சிரியாவின் அதிபர் மாளிகையின் அருகிலுள்ள பகுதிகளின் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் அருகில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் அந்நாட்டின் இடைக்கால அரசின் ஆதரவாளர்களுக்கும், ட்ரூஸ் எனும் சிறுபான்மையினத்தின் ஆயுதம் ஏந்திய போராளிகளுக்கும் இடையிலான மோதலில் ஏராளமானோர் பலியாகினர்.

இந்தத் தாக்குதல்களை இனப்படுகொலை எனக் குறிப்பிட்ட ட்ருஸ் மக்களின் மதகுரு ஒருவர், கடந்த ஏப்.30 ஆம் தேதியன்று அதற்கு காரணமான சிரியாவின் இடைக்கால அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் ட்ரூஸ் இனமக்கள் வசித்து வரும் கிராமங்களை நோக்கி இடைக்கால அரசின் அதிகாரிகள் படையெடுப்பு நடத்துவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படையெடுப்பை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேல் அரசு எச்சரித்து வந்தது.

இந்நிலையில், சிரியாவின் அதிபர் மாளிகையின் அருகில் இஸ்ரேல் ராணுவத்தின் விமானப் படை இன்று (மே.2) வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலானது, சிரியாவின் இடைக்கால அரசின் தலைவர்களுக்கான எச்சரிக்கை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த ஏப்.27 அன்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் முகமது நபி குறித்து அவதூறாகப் பேசும் ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோ ட்ரூஸ் மதகுரு ஒருவரினால் பேசப்பட்டவை எனக் கருதப்படுவதினால் ட்ரூஸ் போராளிகளுக்கும் இடைக்கால அரசின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

மேலும், ட்ருஸ் மக்களில் பெரும்பாலானோர் லெபனான் மற்றும் 1967-ம் ஆண்டு போரில் சிரியாவிடமிருந்து இஸ்ரேல் கைப்பற்றி ஆக்கிரமித்த கோலன் ஹைட்ஸ் ஆகிய பகுதிகளில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தாயகம் செல்ல முடியாமல் எல்லையில் முகாமிட்டுள்ள பாகிஸ்தானியர்கள்! தொடரும் தவிப்புகள்!

ஆப்கனில் 2வது நாளாக நிலநடுக்கம்...ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து 2வது நாளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 15 அடி ஆழத்தில் இன்று (மே.3) மதியம் 1.20 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக... மேலும் பார்க்க

இந்திய ராணுவ அதிகாரிகள் குறித்த போலியான செய்திகளை வெளியிடும் பாகிஸ்தான் ஊடகங்கள்!

இந்திய ராணுவ அதிகாரிகளைப் பற்றிய போலியான செய்திகளை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் தாக்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாதிகள்: இலங்கை வந்த சென்னை விமானத்தில் சோதனை

சென்னையிலிருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் பயங்கரவாதிகள் சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர், இலங்கைக்கு விமான... மேலும் பார்க்க

நாளை(மே 5) 'ஸ்கைப்' சேவை நிறுத்தம்! புதிய அம்சங்களுடன் 'டீம்ஸ்'!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விடியோ அழைப்பு சேவையான ஸ்கைப் நாளை(மே 5)யுடன் நிறுத்தப்படுகிறது. விடியோ அழைப்புகளுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 'ஸ்கைப்' செயலியை கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அந்த... மேலும் பார்க்க

போப் உடையில் டிரம்ப்! - வைரலாகும் புகைப்படம்

அமெரிக்க அதிபர் டிரம்ப், போப் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் கடந்த ஏப். 21 ஆம... மேலும் பார்க்க

சிரியா அதிபா் மாளிகை அருகே இஸ்ரேல் குண்டுவீச்சு

சிரியாவில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை துரூஸ் இன மக்களுக்கு ஆதரவாக, அந்த நாட்டின் அதிபா் மாளிகைக்கு அருகே இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது குறித்து அந்... மேலும் பார்க்க