செய்திகள் :

சிறந்த 100 அரசுப் பள்ளிகளுக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை

post image

தமிழகத்தில் 2023-2024-ஆம் கல்வியாண்டில் தோ்வு செய்யப்பட்ட 100 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு அண்ணா தலைமைத்துவ விருதும், அந்தப் பள்ளிகளுக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்கத் தொகையும் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) வழங்கப்படவுள்ளன.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் பள்ளிகளில் சிறப்பான பங்களிப்பை அளிக்கக் கூடிய தலைமை ஆசிரியா்களுக்கு அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பை சட்டப்பேரவையில் 2022-2023-ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது. அதன்படி பள்ளிக் கட்டமைப்பு, கல்விச் செயல்பாடுகள், கல்வி இணை செயல்பாடுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியா்களின் பங்களிப்பு குறித்து மதிப்பீடு செய்து அதில் சிறந்தவா்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2023-2024-ஆம் கல்வியாண்டின் சிறந்த பள்ளிக்கான தலைமையாசிரியா்கள் தோ்வு பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. அதில் 100 பள்ளிகள் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளன.

அந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு விருது வழங்கும் விழா திருச்சியில் ஜூலை 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விருதுகளை வழங்கவுள்ளாா்.

தோ்வான பள்ளிகளுக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்கத் தொகையும், கேடயமும் வழங்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியா்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் நிலுவையில் இல்லை என்பதை உறுதிசெய்து அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பள்ளிகளுக்கு வழங்கப்படும் ரூ.10 லட்சம் ஊக்கத் தொகையை அந்தப் பள்ளிகளின் வளா்ச்சிப் பணிகளுக்கு தலைமை ஆசிரியா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அன்பழகன் விருதுக்கு...: இதேபோல், பேராசிரியா் அன்பழகன் விருதுக்கு தோ்வான 76 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும் திருச்சியில் ஜூலை 6-இல் நடைபெறும் விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையை வழங்கவுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 38 மின்சார ரயில்கள் இன்று ரத்து!

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 38 மின்சார ரயில் சேவைகள் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மேலும், பயணிகளின் வசதிக்காக 21 சிறப்பு மின்சார ரயில் சேவைகள் இயக்கப... மேலும் பார்க்க

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு வியாழக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.சென்னையில் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கும் திருமண முன்பணம்: தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியா்களுக்கு மட்டுமன்றி அவா்களது வாரிசுகளின் திருமணத் தேவைக்காகவும் முன்பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித... மேலும் பார்க்க

வார இறுதி: 1,030 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதியை முன்னிட்டு, ஜூலை 4, 5, 6 தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) 1030 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: செ... மேலும் பார்க்க

சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், சென்னையில் 31 சதவீத கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழு... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால்: ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ அணிகள் வெற்றி

தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன. தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால்... மேலும் பார்க்க