முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
சிறப்பாக பணியாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்கு விருதுகள்
தேசிய ஓட்டுநா் தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிமைக்காக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் மனோஜ், பிரபுதேவா ஆகியோருக்கு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா திங்கள்கிழமை வழங்கிப் பாராட்டினாா்.
புதுகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது இந்த விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், அறந்தாங்கி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ரூ. 16,500 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலியும் கோரிக்கை மனு அளித்த உடனேயே வழங்கப்பட்டது.
கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 543 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் அ. ஷோபா, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன், 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம். விமல்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.