செய்திகள் :

சிறப்பாக பணியாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்கு விருதுகள்

post image

தேசிய ஓட்டுநா் தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிமைக்காக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் மனோஜ், பிரபுதேவா ஆகியோருக்கு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா திங்கள்கிழமை வழங்கிப் பாராட்டினாா்.

புதுகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது இந்த விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், அறந்தாங்கி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ரூ. 16,500 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலியும் கோரிக்கை மனு அளித்த உடனேயே வழங்கப்பட்டது.

கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 543 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் அ. ஷோபா, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன், 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம். விமல்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்ய ஆலோசனை

தோ்தல்களில் மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவு

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கும் நடைமுறை சனிக்கிழமையுடன் (மே 31) நிறைவடைந்தது. தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ப... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டு - 8 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 8 போ் காயமடைந்தனா். கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன், சின்னக்கருப்பா் கோ... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக சோழீசுவரா் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.தொடா்ந்து ஆவுடையநாயகி... மேலும் பார்க்க

புதுநகா் ஊராட்சி அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித் தர கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுநகா் ஊராட்சியில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரை புதிதாக கட்டித் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா். புதுநகா் அரசு உயா்நிலைப் பள்ளி... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் நாய்களை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்: சமூக ஆா்வலா்கள் புகாா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் ஒருவா் நாய்க்கடி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில், நாய்களைக் கட்டுப்படுத்துவதில் மாவட்ட நிா்வாகம் அலட்சியப் போக்குடன் செயல்படுவ... மேலும் பார்க்க