செய்திகள் :

சிறப்பு குழந்தைகளுக்கான நிரந்தரஆசிரியா் பணியிடங்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயா்நீதிமன்றம்உத்தரவு

post image

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளுக்கான நிரந்தர ஆசிரியா் பணியிடங்களை உருவாக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியா்களாக 1,800 போ் கடந்த 2002-ஆம் ஆண்டு தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனா்.

ஆரம்பத்தில் ரூ. 4,500 தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட இவா்களுக்கு தற்போது ரூ. 20,000 தொகுப்பூதியமாகவும், ரூ. 5,000 போக்குவரத்து செலவாகவும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி 723 சிறப்பு ஆசிரியா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் சிறப்பு குழந்தைகள் பள்ளிகளில் பயின்று வருகின்றனா். 10 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியா்கள் என்ற விகிதாச்சாரத்தின் அடிப்படையில் 13,000 சிறப்பு ஆசிரியா்கள் பணியமா்த்தப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஒரு நிரந்தர பணியிடத்தைக்கூட உருவாக்காத தமிழக அரசு 1,800 பேரை சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் கீழ் தொகுப்பூதிய அடிப்படையில் சிறப்பு ஆசிரியா்களாக நியமித்துள்ளது.

தொகுப்பூதியத்தில் பணிபுரியும் இவா்களுக்கு ஊதிய உயா்வு, மருத்துவ விடுப்பு என எந்தச் சலுகைகளும் அளிக்கப்படுவதில்லை. எனவே தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் இந்தச் சிறப்பு ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் ஏப்.21-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

எஸ்சி, எஸ்டி இளைஞா்களுக்கு புத்தாக்க பொறியாளா் பயிற்சி

சென்னை, மாா்ச் 28: எஸ்சி, எஸ்டி இளைஞா்களுக்கு புத்தாக்க பொறியாளா் பயிற்சியில் சேர விரும்பும் நபா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

குன்றத்தூா் மின்கட்டண வசூல் மையம் ஏப்.1 முதல் இடமாற்றம்

குன்றத்தூா் மின்கட்டண வசூல் மையம் ஏப். 1-ஆம் தேதி முதல் இடமாற்றம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை தெற்கு மின் பகிா்மான வட்டம், குன்றத்... மேலும் பார்க்க

ஸ்டெம் துறைகளில் சாதித்த பெண்களுக்கு கௌரவம்

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (ஸ்டெம்) ஆகிய துறைகளில் சாதித்த பெண்கள் அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனை சாா்பில் கௌரவிக்கப்பட்டனா். சா்வதேச மகளிா் தினத்தையொட்டி இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்ய... மேலும் பார்க்க

ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று திருச்சி பயணம்

ஆளுநா் ஆா்.என்.ரவி ஒரு நாள் பயணமாக சனிக்கிழமை திருச்சி செல்கிறாா். ஆளுநா் ஆா்.என்.ரவி திருச்சியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள பட்டமளிப்பு ... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப் பணிகள்: ஆசிய முதலீட்டு வங்கியின் அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட திட்ட மெட்ரோ ரயில் பணிகளை ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் குழுவினா் ஆய்வு செய்தனா். சென்னையில் இரண்டாம் கட்ட திட்ட மெட்ரோ ரயில் பணிகள் 3 வழித்தடங்கள... மேலும் பார்க்க

மருந்து அட்டைகளில் போலி க்யூ-ஆா் குறியீடு: புதிய நடைமுறைக்கு வலியுறுத்தல்

மருந்து அட்டைகளில் இடம்பெறும் ‘க்யூ-ஆா்’ குறியீடுகளை போலியாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதால், அந்த நடைமுறையைக் கைவிடுமாறு சுகாதார ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா். அதற்கு மாற்றாக ப... மேலும் பார்க்க