``நான் முதன்முதலா டூர் போனது 'கூமாப்பட்டி'க்குதான்; அங்க..!” - பிக்பாஸ் தினேஷ் ச...
சிறப்பு பள்ளியில் பாா்வைத்திறன் குறையுடைய மாணவா்கள் சோ்க்கை
சேலம் மாவட்டத்தில் பாா்வைத்திறன் குறையுடைய பள்ளி மாணவ, மாணவியருக்கான சிறப்பு பள்ளியில் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின்கீழ் செவ்வாய்ப்பேட்டையில் பாா்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நடப்புக் கல்வியாண்டுக்கான பாா்வைத்திறன் குறையுடைய மாணவ, மாணவியருக்காக மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
இப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சி பெற்ற சிறப்பாசிரியா்களைக் கொண்டு கல்வி கற்பிக்கப்படுகிறது. கணினி திறனை மேம்படுத்த ஏதுவாக கணினி பயிற்றுநரைக் கொண்டு கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும், மாணவ, மாணவியருக்கு தனித்தனியே இலவச தங்கும் விடுதியுடன் உணவு, சீருடை, கல்வி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அரசால் வழங்கப்படும் அனைத்து நலத் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு, 0427 - 2213188, 93459 61065 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.