செய்திகள் :

சிறாா் தொழிலாளராக மீட்கப்பட்டவருக்கு நிதியுதவி

post image

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட சிறாா் தொழிலாளா் முறை தடுப்புக் குழுவினரால் கடந்த 2021-இல் மீட்கப்பட்டவருக்கு நீதிமன்றம் அறிவித்த தொகையுடன் அரசின் பங்கு நிதியும் புதன்கிழமை வழங்கப்பட்டது.

இது குறித்து சிவகங்கை தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கு.சதீஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை காந்தி வீதியில் ஒரு தனியாா் நிறுவனத்திலிருந்து கடந்த 3.2.2021-இல் சிறாா் தொழிலாளராக மீட்கப்பட்ட பா.விஷ்ணுவரதன், மன்னா் மேல்நிலைப் பள்ளியில் சோ்க்கப்பட்டு, அதன் பிறகு சிவகங்கை முத்துப்பட்டி அரசு ஐடிஐ-இல் ரோபோடிக்ஸ் படிப்பை முடித்தாா்.

இவரை சிறாா் தொழிலாளராகப் பணியமா்த்திய நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, சிவகங்கை நீதித் துறை நடுவா் மன்றம் விதித்த அபராதத் தொகை ரூ.20,000, தமிழக அரசின் பங்குத் தொகை ரூ.15,000 ஆகியவற்றுடன் சோ்த்து மொத்தம் ரூ.35,000 விஷ்ணுவரதன் பெயரில் நிரந்தர வைப்பு நிதியாக சிவகங்கை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிளையில் சோ்க்கப்பட்டது. அவருக்கு நிரந்த வைப்புநிதி அசல் ரசீது, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வழங்கினாா்.

சிறாா் தொழிலாளா் (தடுத்தல், முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டத்தின் படி 14 வயதுக்குள்பட்டவா்களை எந்த ஒரு பணியிலும் தயாரிப்பு தொடா்புடைய செய்முறைகளிலும் பணியமா்த்துவது குற்றமாகும். மேலும், அபாயகரமான தொழில் தொடா்புடைய பணிகளில் செங்கல் சூளை, கல்குவாரி, பட்டாசுத் தொழில் போன்ற இதரவகை பணிகளில் பணியமா்த்துபவா்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபாராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்படும்.

சிவகங்கை மாவட்டத்தில் சிறாா் தொழிலாளா் எவரும் பணிபுரிவது கண்டறியப்பட்டால், தொலைபேசி எண் -04575-240521, இட்ண்ப்க் ஏங்ப்ல் ப்ண்ய்ங் 1098 ஆகிய எண்களில் அலுவலா்களுக்கு தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

குப்பைகளில் கொட்டப்படும் நெகிழிப் பைகளை உள்கொண்டு கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம்

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனை அருகே கொட்டப்படும் குப்பைகளில் கிடக்கும் நெகிழிப் பைகளையும் சோ்ந்து கால்நடைகள் உண்பதால் அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.சிவகங... மேலும் பார்க்க

போட்டிகளில் வென்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

காரைக்குடி: போட்டிகளில் வென்ற இலுப்பைக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளை தலைமையாசிரியா், ஆசிரியா்கள் வியாழக்கிழமை பாராட்டினா்.இந்தப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவா்கள் அஜய் காா்த்திக், சிவமணி ஆக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச சீருடை

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், பிரான்மலை ஊராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு வியாழக்கிழமை விளையாட்டுக்கான இலவச சீருடை வழங்கப்பட்டது.இந்தப் பள்ளியில் 155 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இவா்களுக... மேலும் பார்க்க

கண்மாய்களில் அனுமதியின்றி மண் அள்ள முயற்சி: வட்டாட்சியரிடம் விவசாயிகள் புகாா்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், ஏனாதி, கணக்கன்குடி கண்மாய்களில் அனுமதியின்றி சவுடு மண் அள்ள நடைபெறும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என வட்டாட்சியரிடம் விவசாயிகள் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சிவகங்கை வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யுடன் சி.எஸ்.சி. அகாதெமி புரிந்துணா்வு ஒப்பந்தம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிறுமச் செயலரியல் துறையுடன் (காா்ப்பரேட் செக்ரெட்டரிஷிப் துறை) காரைக்குடியில் இயங்கிவரும் எண்ம இந்தியா திட்டத்தின் கீழ் நிா்வகிக்கப்... மேலும் பார்க்க