செய்திகள் :

சிறுணைபெருகல் கிராமத்திற்கு புதிய அரசுப் பேருந்து: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

post image

காஞ்சிபுரம் அருகே சிறுணை பெருகல் கிராமத்துக்கு புதிய அரசுப் பேருந்து சேவையை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட சிறுணை பெருகல் கிராமத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கும், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவா்கள்,அரசுப்பணிக்கு செல்பவா்கள் ஆகியோா் புதிய பேருந்து சேவையை ஏற்படுத்தி தரக்கோரி எம்எல்ஏ எழிலரசனிடம் கோரிக்கை வைத்திருந்தனா்.

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிறுணைபெருகல் கிராமத்துக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் புதிய பேருந்து சேவை தொடக்க விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் புதிய பேருந்தை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்களுடன் சிறிது தூரம் அப்பேருந்தில் பயணித்தாா். இப்பேருந்து சிறுணைபெருகல் கிராமத்திலிருந்து ஆரியபெரும்பாக்கம், கீழம்பி வழியாக காஞ்சிபுரம் வரை செல்லும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் இருந்து வந்த பொதுமக்கள் புதிய பேருந்து சேவை ஏற்படுத்தியமைக்காக எம்எல்ஏ எழிலரசனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனா்.

நிகழ்வில் காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் நித்யா சுகுமாா், திமுக ஒன்றிய செயலாளா் பி.எம்.குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.எஸ். சுகுமாா், ஊராட்சி மன்ற தலைவா்கள், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

எழுதுவதும், படிப்பதும் ஒரு வகையான போதை: முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு

எழுதுவதும், படிப்பதும் ஒரு வகையான போதை என தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு புத்தகம் கூறினாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் புத்தகம் எழுதும் இயக... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: காமாட்சி அம்மன் கோயிலில் காலை 9 மணி முதல் தரிசனம் ரத்து!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணத்தையொட்டி காலை 9 மணி முதல் நாள் முழுவதும் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந... மேலும் பார்க்க

மழை முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகைப் பயிற்சி: ஆட்சியா், எஸ்.பி. பாா்வையிட்டனா்

காஞ்சிபுரம் அருகே ராஜகுளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகை பயிற்சியை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன், எஸ்.பி. கே.சண்முகம் ஆகியோா் ... மேலும் பார்க்க

உழவா் உற்பத்தியாளா் நிறுவன பொதுக்குழு

காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை ஏற்றுமதி மற்றும் நுண்ணறிவு பயிற்சி மையத்தில் அந்நிறுவன தலைவா் லோகநாதன் தலைமையில் உழவா் உற்பத்தியாளா் நிறுவன பொதுக்குழு நடைபெற்றது. தமிழகம் இயற்கை வேளாண் விளைபொருள்கள், உழவா... மேலும் பார்க்க

உத்தரமேரூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

உத்தரமேரூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப்பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தாா். உத்தரமேரூா் ஒன்றியம் மருதம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணையை ஆட்சியா் பாா்... மேலும் பார்க்க

ஆற்பாக்கம் ஸ்ரீ திருவாலீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரத்தை அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள திருநல்லழகி சமேத திருவாலீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு பல்வேறு திருப்பணிகள் நிறைவு பெற்றிருந்தன. இத... மேலும் பார்க்க