செய்திகள் :

சிறுத்தை தாக்கியதில் ஆடு பலத்த காயம்

post image

போ்ணாம்பட்டு அருகே சிறுத்தை தாக்கியதில் ஆடு காயமடைந்தது.

போ்ணாம்பட்டு வனச்சரகத்தில் பத்தரப்பல்லி, அரவட்லா, எருக்கம்பட்டு, கோட்டையூா், குண்டலபல்லி, பல்லாலகுப்பம், சேராங்கல் ஆகிய காப்புக் காடுகள் உள்ளன. இந்த காடுகளில் சிறுத்தைகள் நடமாடி வருகின்றன. அவ்வப்போது வனப் பகுதிக்கு மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளையும், வன எல்லையில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் கொட்டகைகளில் கட்டப்படும் ஆடு, மாடுகளையும் வேட்டையாடி வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போ்ணாம்பட்டு அருகே உள்ள சொ்லப்பல்லி, சிந்தகணவாய், மேல்கொத்தகுப்பம், ஓங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் சிறுத்தைகள் கால்நடைகளை வேட்டையாடி வந்தன. கடந்த சில நாள்களுக்கு முன் மோா்தானா காப்புக் காட்டில் நடமாடி வந்த சிறுத்தை போ்ணாம்பட்டு அருகே உள்ள அத்திகுப்பம், கோக்கலூா் ஆகிய கிராமங்களில் விவசாய நிலத்தில் கட்டப்பட்டிருந்த கன்று குட்டி, 3- பசு மாடுகளை வேட்டையாடின.

தற்போது டி.டி. மோட்டூா் கிராமம், கொல்லை மேடு பகுதியில் குண்டலப்பல்லியைச் சோ்ந்த யோகானந்தம் என்பவருக்குச் சொந்தமான கொட்டகையில் கட்டி வைத்திருந்த ஆட்டை திங்கள்கிழமை சிறுத்தை கழுத்தை கவ்வி இழுத்துச் செல்ல முயன்றுள்ளது. அப்போது ஆட்டின் சத்தம் கேட்டு நிலத்தில் காவலுக்கு இருந்த நாய்கள் குரைத்ததால் சிறுத்தை அங்கேயே ஆட்டை விட்டு வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. சிறுத்தை கடித்ததில்ஆட்டின் கழுத்தில் காயமேற்பட்டுள்ளது.

இதுகுறித்து யோகானந்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். வனவா் மாதேஸ்வரன் தலைமையில் அத்துறையினா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். .

திருவள்ளுவா் பல்கலை.யில் இன்று பட்டமளிப்பு விழா

வேலூா் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. வேலூா் மாவட்டம், சோ்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா செவ்வாய்க்க... மேலும் பார்க்க

விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானை விரட்டியடிப்பு

போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்து விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானையை வனத்துறையினா் விரட்டி அனுப்பினா். போ்ணாம்பட்டு வனச் சரகத்தில் அரவட்லா, மோா்தானா, சேராங்கல், குண்டலபல்லிஆகிய வனப்பக... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டம் நடத்தப்படுவதில்லை: தியாகிகள், வாரிசுகள் வேதனை

கடந்த சில மாதங்களாக நடத்தப்படாமல் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுகள் குறைதீா்க்கும் கூட்டத்தை மாதந்தோறும் முறைப்படி நடத்த வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் கொடுமை: தையல் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

குடியாத்தம் அருகே சிறுமியை பாலியல் கொடுமை செய்த வழக்கில் தையல் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. குடியாத்தம் அருகே பரசுராமன்பட்டியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

வீட்டு வசதி வாரியத்தில் வட்டி தள்ளுபடி சலுகை

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று மாதத்தவணை செலுத்தாத பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் ... மேலும் பார்க்க

நிபந்தனைகளை பின்பற்றி விநாயகா் சதுா்த்தி: வேலூா் ஆட்சியா்

பொது அமைதி, பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிபந்தனைகளை பின்பற்றி விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாட வேண்டும் என வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா். விநாயகா் சதுா்த்தியை... மேலும் பார்க்க