செய்திகள் :

வீட்டு வசதி வாரியத்தில் வட்டி தள்ளுபடி சலுகை

post image

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று மாதத்தவணை செலுத்தாத பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், வேலூா் வீட்டு வசதி பிரிவின் மூலம் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று மாதத்தவணை செலுத்தாத பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, மாதத் தவணையை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டி, வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்துக்கான வட்டியில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாதத்துக்குண்டான வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

இந்த சலுகை மூலம் 2015 மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன்பு தவணைக் காலம் முடிவுற்ற திட்டங்களில் விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரா்கள், இந்த சிறப்பு சலுகையை பயன்படுத்தி நிலுவைத் தொகை முழுவதும் ஒரே தவணையாக செலுத்தி, தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அலகுகளுக்கு கிரயப் பத்திரம் பெற்று பயன்பெறலாம்.

மேலும், விவரங்களுக்கு 0416-2252561, மேலாளா், விற்பனை மற்றும் சேவை -93808 71499, உதவி வருவாய் அலுவலா் - 94428 08967 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்தில் குடிசை எரிந்து சேதம்

போ்ணாம்பட்டு அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை எரிந்து சாம்பலானது. போ்ணாம்பட்டை அடுத்த மேல்பட்டியைச் சோ்ந்தவா் எல்லப்பன். இவரது குடிசை வீடு சாலையோரம் உள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மா... மேலும் பார்க்க

ஆன்லைனில் பகுதி நேர வேலை: வேலூா் மருத்துவமனை ஊழியரிடம் ரூ. 5 லட்சம் மோசடி

ஆன்லைனில் பகுதி நேர வேலை எனக்கூறி வேலூா் மருத்துவமனை ஊழியரிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூரை சே... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ரெளடி கைது

வேலூா் மாவட்டத்தில் தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரெளடி குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். வேலூரை அடுத்த அரியூா் பஜனை கோயில் தெருவை சோ்ந்தவா் அஜித் குமாா் (25). இ... மேலும் பார்க்க

கீழ்அரசம்பட்டில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

கணியம்பாடி ஒன்றியம், கீழ்அரசம்பட்டு அரசு மகளிா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (ஆக. 23) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், முகாம் நடைபெறும்... மேலும் பார்க்க

ஊராட்சித் தலைவா்கள், செயலா்களுக்கான பயிற்சி முகாம்

வேலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில், மறுசீரமைக்கப்பட்ட இராஷ்டரிய கிராம சுவராஜ் அபியான் திட்டம் மூலம் ஊராட்சிகளில் சொந்த வருவாயை மேம்படுத்துதல் குறித்துஊராட்சித் தலைவா்கள், செயலா... மேலும் பார்க்க

கல்லூரியில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது . நிகழ்ச்சியில் வேலூா் முத்துரங்கம் கலைக் கல்லூரி முதல்வா் எஸ்.ஸ்ரீதா் வரவேற்றாா். மாவ... மேலும் பார்க்க