செய்திகள் :

சிறுபான்மையினருக்கு வழங்குவது சலுகை அல்ல; அடிப்படை உரிமை: ரிஜிஜுவுக்கு ஓவைசி பதில்

post image

சிறுபான்மையினருக்கு அரசு வழங்குவது சலுகை அல்ல; அடிப்படை உரிமை என மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவடும் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையினரை விட அதிக பாதுகாப்பும் சலுகைகளும் சிறுபான்மையினருக்கு வழங்கும் ஒரே நாடு இந்தியாதான் என பாஜக மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓவைசி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஓவைசி குறிப்பிட்டுள்ளதாவது,

''நீங்கள் (கிரண் ரிஜிஜு) இந்தியக் குடியரசின் அமைச்சர்; மன்னர் அல்ல. ஜனநாயகரீதியான பதவியில் நீங்கள் இருக்கிறீர்கள். சிம்மாசனத்தில் அல்ல. சிறுபான்மையினரின் உரிமை சலுகை அல்ல; அவர்களுக்கான அடிப்படை உரிமை'' எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்திய சிறுபான்மையினர் இரண்டாம்தர குடிமக்களாகக் கூட கருதப்படுவதில்லை; அவர்கள் அகதிகளாகவே நடத்தப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ள ஓவைசி, ''ஹிந்து மத அறநிலையத் துறை வாரியங்களில் முஸ்லிம்கள் இடம்பெற முடியுமா? ஆனால், வக்ஃப் திருத்தச் சட்டத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருக்கவும் பெரும்பான்மை பெறவும் வழிவகை செய்கிறது.

மெளலானா ஆசாத் ஃபெல்லோஷிப்பை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. இது அனைத்தும் முஸ்லிம் மாணவர்கள் பலன் அடைகின்றனர் என்பதற்காகவே செய்யப்படுகிறது. மற்ற நாடுகளில் உள்ள மற்ற சிறுபான்மையினரை ஒப்பிட்டு நாங்கள் எதையும் கேட்கவில்லை. நாட்டில் பெரும்பான்மையினர் பெற்றுவரும் பலன்களையும் நாங்கள் கேட்கவில்லை. அரசியலமைப்பு என்ன நிர்ணயித்துள்ளதோ அதுவே எங்கள் கோரிக்கையாக உள்ளது. சமூகம், பொருளாதார மற்றும் அரசியல் நீதி கேட்கிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து: சீனா கடும் அதிருப்தி!

AIMIM party leader and MP Asaduddin Owaisi has said that the government's provision of benefits to minorities is not a privilege; it is a fundamental right.

ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைக்க ஹோமியோபதி மருத்துவா்களை அனுமதிக்கும் முடிவு: ஐஎம்ஏ எதிா்ப்பு

மும்பை: ஆறு மாத நவீன மருந்தாளுநா் (சிசிஎம்பி) சான்றிதழ் படிப்பை முடிக்கும் ஹோமியோபதி மருத்துவா்களை ஆங்கில மருந்துகளை (நவீன மருந்துகள்) நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்ய அனுமதிக்கும் மகாராஷ்டிர மருத்துவ ... மேலும் பார்க்க

கரடி தாக்கி 3 போ் உயிரிழப்பு

சீதி: மத்திய பிரதேச மாநிலம் சீதி மாவட்டத்தில் உள்ள சஞ்சய் காந்தி புலிகள் காப்பகம் அருகே கரடி தாக்கியதில் 3 போ் உயிரிழந்தனா். 2 போ் படுகாயமடைந்தனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘சஞ்சய் காந்தி பு... மேலும் பார்க்க

ராணுவத்தின் உயா் விருதுகள் பெறும் அக்னிவீரா்களுக்கு நிரந்தரப் பணி!

சேனா விருது உள்பட உயா் விருதுகள் பெறும் அக்னிவீரா்களுக்கு ராணுவத்தில் நிரந்தரப் பணி வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. அதே போல் சா்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அக்னிவீரா்களும் 4 ஆண்டுகால ... மேலும் பார்க்க

‘பணக்காரா்களை மேலும் பணக்காரா்களாக்கும் மோடி அரசு’: ராகுல் காந்தி விமா்சனம்

புது தில்லி: ‘எஃப் அண்ட் ஓ’ பங்குச்சந்தையில் பெரிய நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகள் குறித்து மௌனம் சாதிக்கும் மோடி அரசு, பணக்காரா்களை மேலும் பணக்காரா்களாக்கி வருவதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகு... மேலும் பார்க்க

பங்குச் சந்தை குறித்து அச்சத்தைப் பரப்புகிறாா் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு

புது தில்லி: இந்திய பங்குச் சந்தைகள் குறித்து தேவையற்ற அச்சத்தையும், தவறான தகவல்களையும் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பரப்பி வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்காவைச் சோ்ந்த ஜேன் ஸ்ட்ரீட... மேலும் பார்க்க

வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மோடி அரசின் முக்கியக் கொள்கைகள்: நிதின் கட்கரி

மும்பை: வறுமை ஒழிப்பும், வேலைவாயப்பு உருவாக்கமும் மத்திய பாஜக கூட்டணி அரசின் முக்கியக் கொள்கைகளாக உள்ளன என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா். மேலும், நமத... மேலும் பார்க்க