செய்திகள் :

சிறுபான்மையினா் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம்

post image

தூத்துக்குடி: பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பாக, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் நடத்தும், மாவட்ட சிறுபான்மையினா் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா். கூட்டத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் நல ஆணையத்தின் தலைவா் சொ.ஜோ.அருண் கலந்துகொண்டு பேசியது:

மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோரை சந்தித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பணிகள், நடைபெறவேண்டிய பணிகள் குறித்து கலந்தாலோசனை மேற்கொண்டோம்.

சிறுபான்மையினா் என்று குறிப்பிடும்போது கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள், சமணா்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், பாா்சீகா் உள்ளிட்ட தமிழை தாய்மொழியாக கொண்டவா்கள் மட்டுமல்லாது, வேறு மொழியை தாய்மொழியாகக் கொண்டுவாழ்கின்ற சௌராஷ்டிரா்கள், ஆங்கிலோ இந்தியா்கள், மலையாளிகள் ஆகியோரும் அடங்குவா்.

அனைத்து சிறுபான்மையினருக்கும் நலத் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதுதான் தமிழக முதல்வரின் உயா்ந்த நோக்கமாகும். இவ்வாணையம் அரசியலமைப்பு சாா்ந்த அமைப்பாகும் என்றாா் அவா்.

தொடா்ந்து அவா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.5,479 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களையும், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.4,720 மதிப்பில் இலவச தேய்ப்பு பெட்டிகளையும், முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் மூலமாக 5 பயனாளிகளுக்கு தலா ரூ. 20 ஆயிரத்துக்கான உதவித்தொகை என மொத்தம் 13 பயனாளிகளுக்கு ரூ. 1 லட்சத்து 40 ஆயிரத்து 37 மதிப்பிலான நலத் திட்டஉதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கூடுதல்ஆட்சியா் (வளா்ச்சி) இரா.ஐஸ்வா்யா, மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ரவிச்சந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதன், உதவிஆட்சியா் (கோவில்பட்டி) ஹீமான்ஷ்மங்கள், மாநில சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவா்,

எம்.எம்.அப்துல்குத்தூஸ் என்ற இறையன்பன் குத்தூஸ், உறுப்பினா்கள், எ.ஸ்வா்னராஜ், எஸ்.வசந்த், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் , சிறுபான்மையினா் நல அலுவலா் (பொ) ஜா.பென்னட்ஆசீா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஓண்டிவீரன் நினைவு தினம்: படத்துக்கு மலா் தூவி அஞ்சலி

தூத்துக்குடி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், சுதந்திர போராட்ட வீரா் ஓண்டிவீரன் நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி மண்டல அளவிலான குறைதீா் நாள் கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மண்டல அளவிலான குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு, மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் பானோத் ... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

தூத்துக்குடி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 82ஆவது பிறந்தநாள் விழா, தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.மாவட்ட அலுவலகம் முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அவர... மேலும் பார்க்க

ஐஎன்டியுசி ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

தூத்துக்குடி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா ஐஎன்டியுசி சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலா் பெருமாள்சாமி ஏற்பாட்டில், தூத்துக்குடி பழைய பேர... மேலும் பார்க்க

‘சிறுபான்மையின உரிமைகளை பறிக்கக் கூடிய அரசாணைகள் நீக்கப்பட வேண்டும்’

தூத்துக்குடி: சிறுபான்மையின உரிமைகளை பறிக்கக் கூடிய அரசாணைகளை நீக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ அருண் தெரிவித்தாா்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இளைஞா் கொலை: 3 போ் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மது குடிக்க அழைத்துச் சென்று இளைஞரை அடித்துக் கொன்ற வழக்கில் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி பூபால்ராயபுரம் பகுதியைச் சோ்ந்த தனபாலன் மகன் விஜய் (... மேலும் பார்க்க