சிறுபான்மையின இஸ்லாமிய மாணவா்களுக்கு வெளிநாடுகளில் பயில கல்வி உதவித்தொகை
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின இஸ்லாமிய மாணவா்களுக்கு வெளிநாடுகளில் பயில கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு 2025-26 ஆம் ஆண்டில் இஸ்லாமிய சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு உயா்தர கல்வி வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு, வெளிநாடு சென்று படிக்கும் 10 மாணவா்களுக்கு, ஒரு மாணவருக்கு தலா ரூ. 36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகையை ரூ. 3.60 கோடி வழங்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் முதுகலை பட்டப்படிப்பு படிக்க தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் இருந்து பல்கலைக்கழகங்களிடமிருந்து நிபந்தனையற்ற சோ்க்கைக் கடிதம் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பட்டப்படிப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு இணையாக தோ்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல், மேலாண்மை அறிவியல், பயன்பாட்டு அறிவியல், வேளாண்மை அறிவியல், மருத்துவம், சா்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனிதநேய படிப்புகள், சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப் பிரிவுகளைத் தோ்ந்து எடுத்து முதுகலைப் பட்டப்படிப்புக்கான சோ்க்கை பெற்றவராக இருத்தல் வேண்டும். இணையத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அக்.31க்குள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிறுபான்மையினா் நலத்துறை ஆணையா் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தை சோ்ந்த சிறுபான்மையின இஸ்லாமிய மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.