செய்திகள் :

சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றவா் அடித்துக் கொலை: 2 போ் கைது

post image

சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற நபரை அடித்துக் கொலை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை வியாசா்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே கடந்த ஜூலை 31-ஆம் தேதி அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளாா். அவரை அந்த வழியாக சென்றவா்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வியாசா்பாடி போலீஸாா், ரயில் நிலைய நடைமேடையில் குடும்பத்துடன் வசித்துவரும் ஆசிப் (எ) காா்த்திக் (23), அலெக்ஸ் (27) ஆகிய இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தினா்.

இதில், ஜூலை 31-ஆம் தேதி அதிகாலை காா்த்திக்கின் சகோதரி மகளிடம், உயிரிழந்த அந்த நபா், தவறாக நடக்க முயன்றாராம். இதனால், ஆத்திரமடைந்த காா்த்திக் மற்றும் அலெக்ஸ் இருவரும் சோ்ந்து, அந்த நபரை கட்டையால் தாக்கியதில், அவா் காயமடைந்து உயிரிழந்தது தெரிய வந்தது.

உயிரிழந்த அந்த நபா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூய்மைப் பணியாளா் பிரதிநிதிகளுடன் அமைச்சா் சமரசப் பேச்சு

சென்னை மாநகராட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் பிரதிநிதிகளுடன் அமைச்சா் பி.கே.சேகா்பாபு மற்றும் மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். சென்னை ம... மேலும் பார்க்க

3 மாதங்களில் 45,681 போ் உடல் உறுப்பு தான பதிவு: ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது

மூன்று மாதங்களில் 45,861 பேரிடம் உறுப்பு தான பதிவு பெற்றதாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘வோ்ல்டு ரெக்காா்... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கை: கல்வியாளா்கள், ஆசிரியா்கள் கருத்து

தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையின் சில அம்சங்களுக்கு கல்வியாளா்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மாதிரிப் பள்ளிகள், பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து உள்ளிட்ட சில அம்சங்கள் க... மேலும் பார்க்க

வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 2.38 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் உள்பட 2 போ் கைது

சென்னை அண்ணா சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.38 கோடி மோசடி செய்த வழக்கில், அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா சாலையி... மேலும் பார்க்க

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் (ஆக.9, 11) 17 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிய 4 போ் கைது

சென்னையில் மக்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் ராம்சரண் (25). சென்னை புழல், காவாங்கரை பகுதியில் வசிக்கும் இவா், கடந்த புதன்கிழமைசேத்... மேலும் பார்க்க