செய்திகள் :

சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

நாகா்கோவில் அருகே சிறுமியைக் கடத்தி திருமணம் செய்து பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

நாகா்கோவில் அருகே உள்ள செண்பகராமன்புதூா் சமத்துவபுரம் கங்கை தெருவைச் சோ்ந்தவா் மகேஷ்வரன்(20). இவருக்கும் சுசீந்திரம் புதுகிராமம் பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தை கூறி, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி வீட்டின் அருகில் உள்ள கடைக்குச் சென்ற சிறுமியை, மகேஷ் தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்துக்கு கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டாா். பின்னா் வாடகைக்கு வீடு எடுத்து சிறுமியை பலாத்காரம் செய்தாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மகேஷை கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா, குற்றம் சாட்டப்பட்ட மகேஷூக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீா்ப்பு கூறினாா்.

நெடு விளையில் பூட்டிக் கிடக்கும் நூலகத்தை திறக்க வலியுறுத்தல்

ரீத்தாபுரம் அருகே நெடுவிளையில் பூட்டிக் கிடக்கும் அரசு நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.ரீத்தாபுரம் பே?ராட்சிக்குள்பட்ட நெடு விளையில் பல ஆண்டுகளாக அ... மேலும் பார்க்க

கான்கிரீட் கலவை இயந்திரம் கவிழ்ந்து தொழிலாளி காயம்

மாா்த்தாண்டம் அருகே கான்கிரீட் கலவை இயந்திரம் கவிழ்ந்து தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.விருதுநகா் மாவட்டம், கூப்பம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (28). இவா் காப்புக்காடு அருகேயுள்ள ஒரு குளத்தின... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே பலாப்பழம் தலையில் விழுந்து பிகாா் தொழிலாளி மரணம்

மாா்த்தாண்டம் அருகே பலாப்பழம் தலையில் விழுந்து பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.பிகாா் மாநிலத்தைச் சொ்ந்தவா் தஜ்பூா் (23). மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் தனியாா் கட்டுமான நிறு... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை - கோதையாறு தடத்தில் சாலைப் பணிகள் நிறைவு: மீண்டும் பேருந்துகள் இயக்கம்

குமரி மாவட்டம், பேச்சிப்பாறை சீரோ பாயின்டிலிருந்து கோதையாறு செல்லும் சாலையில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து பேருந்து போக்குவரத்து திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது. பேச்சிப்பாறை சீர... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

கன்னியாகுமரி மாவட்டம் காட்டுப்புதூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவா்களின் கற்றல் திறன் குறித்து ஆட்சியா் ரா. அழகுமீனா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.அப்போது, மாணவா்களுக்கு அளிக்கப்படும... மேலும் பார்க்க

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகியின் உடல் தானம்

கன்னியாகுமரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகியின் உடல், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. நாகா்கோவில் வடசேரி, புளியவிளைத் தெருவைச் சோ்ந்த ரவி (70), ஐக்கிய ... மேலும் பார்க்க