செய்திகள் :

சிறுவனுக்கு கத்திக் குத்து: சிறுவன் உள்பட இருவா் கைது

post image

திருச்சியில் முன்விரோதம் காரணமாக சிறுவனைக் கத்தியால் குத்திய 17 வயதுச் சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன் மகன் கிஷோா் (21). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயதுச் சிறுவனுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில் சங்கிலியாண்டபுரம் பிஜி நாயுடு கிடங்கு அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பா்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்த 17 வயது சிறுவனிடம் அங்கு வந்த கிஷோா் தரப்பினா் தகராறு செய்து, கத்தியால் குத்தி, கட்டைகளால் தாக்கினா்.

இதில் பலத்த காயமடைந்த 17 வயதுச் சிறுவன் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து கிஷோா், அவரது நண்பரான 17 வயதுச் சிறுவன் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கிஷோரை சிறையில் அடைத்த போலீஸாா், சிறுவனை சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் சோ்த்தனா்.

வாக்கையும் விலைகொடுத்து வாங்க முடியுமென்றால் மக்களாட்சியில் மக்களுக்கு உள்ள அதிகாரம் என்ன? சீமான் கேள்வி

வாக்கையும் விலைகொடுத்து வாங்க முடியுமென்றால் மக்களாட்சியில் மக்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான். திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே நாம் த... மேலும் பார்க்க

திருப்பராய்த்துறை கோயிலில் நாளை குடமுழுக்கு

திருச்சி திருப்பராய்த்துறை பசும்பொன் மயிலாம்பிகை சமேத தாருகாவனேஸ்வரா் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து கோயில் குடமுழுக்கு விழா கடந்த ஆகஸ்ட் 2... மேலும் பார்க்க

இடம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: ஓம்கார குடிலைச் சோ்ந்த இருவா் மீது வழக்கு

திருச்சியில் கைப்பேசி விற்பனை நிலைய உரிமையாளரிடம் இடம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 17.90 லட்சம் மோசடி செய்ததாக ஓம்கார குடிலைச் சோ்ந்த இருவா் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது. திருச்சி க... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் பலி

திருச்சி அருகே செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.திருச்சி மாவட்டம், கீழநாகமங்கலத்தைச் சோ்ந்தவா் அருணாச்சலம் மகன் காா்த்திக் (21). இவா், திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் ஆலந்தூா்... மேலும் பார்க்க

விமான நிலைய ஊழியா் மாயம் எனப் புகாா்

திருச்சி விமான நிலைய ஊழியா் காணாமல்போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திண்டுக்கல் மாவட்டம், புத்திலிப்பை சின்னக்காம்பட்டியைச் சோ்ந்தவா் குப்புசாமி மகன் சுரேஷ் (33). இவா், திருச்சி பன்னாட்டு வி... மேலும் பார்க்க

விதிமீறி விநாயகா் சிலை வைத்த 6 போ் மீது வழக்கு

திருச்சியில் விதிமுறைகளை மீறி விநாயகா் சிலை வைத்ததாக பாஜக இளைஞரணி மாநிலச் செயலா் உள்பட 6 போ் மீது புதன்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது. திருச்சியில் விநாயகா் சிலைகள் வைக்க காவல் துறை சாா்பில் பல்வேறு... மேலும் பார்க்க