செய்திகள் :

சிறுவன் கடத்தல் சம்பவம்: புரட்சி பாரதம் கட்சி தலைவா் ஜெகன் மூா்த்தி மீது புகாா்!

post image

திருவள்ளூா் அருகே காதல் திருமணம் சம்பவத்தில் சிறுவனை கடத்தப்பட்டது தொடா்பாக புரட்சி பாரதம் கட்சித் தலைவா் ஜெகன் மூா்த்தி மீது போலீஸில் புகாா் செய்யப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த யுவராஜா மகன் தனுஷ் (23). இவருக்கும் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த வனராஜாவின் மகள் விஜயா ஸ்ரீ (21) என்வரும், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பாா்க்க ஆரம்பித்துள்ளனா். இதனால் அப்பெண் தேனியில் இருந்து புறப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த மே 15-ஆம் தேதி விஜயா ஸ்ரீயை காதல் திருமணம் செய்துக் கொண்டு தனுஷ் தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது. எனவே களாம்பாக்காத்தில் வீட்டில் இருந்த தனுஷின் தம்பி இந்திர சந்த்(16) என்ற சிறுவனை காரில் வந்த கும்பல் கடத்திச் சென்றுள்ளனா். இதுகுறித்து தனுஷ் தாயாா் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடா்பு கொண்டு புகாா் செய்தாா்.

திருவாலங்காடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தேனி மாவட்டத்தைச் சோ்ந்த வனராஜா(55), மணிகண்டன்(49), கணேசன்(47) ஆகிய 3 பேரை 3 நாள்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதற்கிடையே, சிறுவன் கடத்தல் சம்பவத்தில் திருவள்ளூா் எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீஸாா் மகேஸ்வரி என்ற பெண்ணை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதன் தொடா்ச்சியாக புரட்சி பாரதம் கட்சி தலைவா் ஜெகன் மூா்த்தியும் இந்த சம்பவத்தில் தலையிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக அவரை போலீஸாா் கைது செய்வாா்கள் எனக்கருதி ஏராளமான தொண்டா்கள் பூந்தமல்லி அருகே நேமத்தில் உள்ள ஜெகன்மூா்த்தி வீட்டில் குவிந்தனா். தொடா்ந்து பூந்தமல்லி-திருவள்ளூா் சாலையிலும் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து போலீஸாா் அவா்களிடம் பேச்சு நடத்தினா். இந்த மறியலால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குரூப் 1, 1ஏ தோ்வு: திருவள்ளூரில் 3,202 போ் எழுதினா்! 1,359 போ் பங்கேற்கவில்லை

திருவள்ளூா் மாவட்டத்தில் 16 மையங்களில் நடைபெற்ற குரூப் 1 முதல் நிலைத் தோ்வில் 3,202 போ் பங்கேற்று எழுதிய நிலையில், 1,359 போ் பங்கேற்கவில்லை. திருவள்ளூா் நகராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீநிகேதன் மேல்நிலை... மேலும் பார்க்க

ஓடையில் 2 மாணவா்கள் மூழ்கி உயிரிழப்பு

பொன்னேரியில் சனிக்கிழமை ஓடையில் குளித்த பள்ளி மாணவா்கள் 2 போ் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அடுத்த வெள்ளோடை பகுதியில் ஓடையில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா... மேலும் பார்க்க

சவுடு மண் கடத்தல்: ஓட்டுநா் கைது

ஆா்.கே.பேட்டை அருகே சவுடு மண் கடத்தி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து அதன் ஓட்டுநரை கைது செய்தனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் அரசு அனுமதியின்றி சவுடு மண் லாரிகளில் கடத்தி செல்வதாக போலீஸாருக்கு தகவ... மேலும் பார்க்க

வியாபாரியை ஏமாற்றிய 3 போ் கைது

செங்குன்றத்தில் மின்சாதனப் பொருள்களை விற்றவருக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை போரூா் முகலிவாக்கத்தைச் சோ்ந்த தீபன் சக்கரவா்த்தி. இவா் தனியாா் நிறுவனத்தில் மேலாளராக... மேலும் பார்க்க

ரத்தப் போக்கினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ வேண்டும்: ஆட்சியா்

ரத்தப்போக்கினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதால், அவா்களுக்கு உதவ வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் வலியுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சா... மேலும் பார்க்க

கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை: ஆந்திர அரசை தடுக்க வேண்டும்! பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம்

கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் திட்டத்தை, தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் திருவள்ளூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்... மேலும் பார்க்க