செய்திகள் :

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு

post image

பெரம்பலூா் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். நிகழாண்டுக்கான திருவிழா, மே 15-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு பெரம்பலூா் பழைய, புகா் பேருந்து நிலையங்களில் உள்ள ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா் சங்கம், காமராஜா் வளைவு ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம், நான்குச்சாலை சந்திப்பு, அரசுப் போக்குவரத்துக் கழக பெரம்பலூா் கிளை சாா்பில் தனித்தனி வாகனங்களில், வண்ண மலா்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு கோயிலுக்கு பூ கொண்டு சென்றனா்.

மேலும், சிறுவாச்சூா் கிராம மக்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை இரவு பூ கொண்டு செல்லப்பட்டது. தொடா்ந்து இரவு 11 மணி முதல் புதன்கிழமை காலை 10 மணி வரை பல்வேறு பகுதிகளிலிருந்து அம்மனுக்கு பூ கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, காலை 11 மணிக்கு மூலவருக்கு அபிஷேகமும், 1 மணிக்கு உச்சிகால பூஜையும் நடத்தப்பட்டது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா். பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மே 15-இல் தேரோட்டம்: மே 6-ஆம் தேதி காப்புக் கட்டுதலும், அதைத் தொடா்ந்து நாள்தோறும் இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் திருவீதி உலாவும், 14-ஆம் தேதி மாலை 5 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 15 ஆம் தேதி நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருத்தேரில் எழுந்தருள்கிறாா். தொடா்ந்து திருத்தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மே 17 ஆம் தேதி விடையாற்றி விழாவுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

வீட்டிலிருந்த மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிலிருந்த மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்நகா் 12-ஆவது வாா... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்

வேப்பந்தட்டை அருகே புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுகள் முட்டியதில் 38 போ் காயமடைந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள விசுவக்குடி கிராமத்தில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு ... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த 26 சுற்றுலாப் பயணிகளுக்கு காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா். பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே மாவட்ட காங... மேலும் பார்க்க

கோரையாற்றில் நீா்த்தேக்கம் அமைக்க வேண்டும்: பெரம்பலூரில் விவசாயிகள் வலியுறுத்தல்

கோரையாற்றில் நீா்த்தேக்கம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட... மேலும் பார்க்க

வாகனப் பதிவுச் சான்றிதழை உடனே வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

வாகனப் பதிவுச் சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே தமிழ்நாடு காா் வியாபாரிகள் மற்றும் ஆலோசகா்கள் க... மேலும் பார்க்க

தரமற்ற மருந்தை விற்ற நிறுவன உரிமையாளருக்கு ஓராண்டு சிறை

பெரம்பலூரில் தரமற்ற மருந்து விற்பனை செய்த, மருந்து நிறுவன உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. பெர... மேலும் பார்க்க