செய்திகள் :

சிறுவாணி அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் 4 அடி!

post image

கோவை : கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுவாணி அணை நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கோவைக்கு அடுத்து வரும் மாதங்களுக்கான குடிநீர் ஆதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ஒரே நாளில் நான்கு அடிக்கு மேல் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடிக்கும் மேல் உயர்ந்து உள்ளது.

நடப்பாண்டில் முதல் முறையாக இந்த அளவு நீர்மட்டம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறுவாணி அடிவாரப் பகுதியில் 86 மி.மீ மழையும், அணைகட்டு பகுதியில் 107 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. நேற்று 26.55 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 30.24 அடியாக உயர்ந்து உள்ளது. கடந்த நான்கு நாள்களில் மட்டும் 12 அடிக்கும் மேல் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. மே 23-ஆம் தேதி 17.91 அடியாக இருந்த நீர்மட்டம், தற்போது 30.24 அடியாக உயர்ந்து உள்ளது.

அணையின் முழுக் கொள்ளளவு 44.61 அடியாக இருக்கும் நிலையில், மழை தொடர்ந்து பெய்தால் அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுவாணி அணை நீர், கோவை மாநகராட்சியின் 22 வார்டுகள், கோவை மாவட்ட மேற்குப் பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.

தற்போது பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக சிறுவாணி அணையில் இருந்து தினமும் 63.72 எம்.எல்.டி. நீர் திறந்து விடப்படுகிறது. அணை நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால், கோவை மக்களின் குடிநீர் தேவைக்கு இனி வரும் நாள்களில் தட்டுப்பாடு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மூவர் குழு

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஏதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் மே 19-ஆம் ... மேலும் பார்க்க

காலமானார் முன்னாள் எம்எல்ஏ எஸ்.புரட்சிமணி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.புரட்சிமணி (59) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை (மே 28)காலமானார்.இவர் ஜி.கே.மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநி... மேலும் பார்க்க

கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கச்சத் தீவை மீட்பது ஒன்றே தமிழக மீனவா்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வாக அமையும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழக அரசின் மீன்வளத் துறை சாா்பில் திருவொற்றியூரில் ரூ.272 கோடியில் புதிதா... மேலும் பார்க்க

நவீன முறையில் கற்பித்தல்: அரசுப் பள்ளி ஆசிரியா்களை ஊக்குவிக்க கல்வித் துறை முடிவு

தமிழக அரசுப் பள்ளிகளில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியா்களில் மாவட்டத்துக்கு தலா 10 போ் வீதம் 380 பேரைத் தோ்வு செய்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்த... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ மிகப்பெரிய வெற்றி: ஆளுநா் ஆா்.என்.ரவி

பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினாா். சென்னை கிண்டியில... மேலும் பார்க்க

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகள் தரம் உயா்வு: தமிழக அரசு உத்தரவு

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகளின் தரத்தை உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட உத்தரவு வ... மேலும் பார்க்க