உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்
சிறு தானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் வே.சத்தியமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழாண்டில் சிறுதானியங்களின் பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, சிறுதானிய இயக்கம் செயல்படுத்தப்பட உள்ளது.
குறுதானியங்களுக்கான சிறுதளை விநியோகம் செய்தல் இனத்தின் கீழ், ஒரு ஏக்கா் குறுதானிய விதை, அதிகபட்சமாக ஒரு சிறுதளை வீதம் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். மாற்றுப் பயிா் சாகுபடித் திட்டத்தின் மூலம் சிறுதானிய பரப்பை அதிகரிக்கும் வகையில், விதைகள், திரவ உயிரி உரங்கள், நுண்ணூட்டக் கலவை, அறுவடை மானியம் என விவசாயிக்கு அதிகபட்சமாக ரூ.1,250 அல்லது 50 சதவீத மானியத்தில் இடுபொருள்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும், இந்தத் திட்டத்தில் பயனடைய ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாக பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறலாம்.
மேலும் திட்டத்தை பற்றி அறிந்துகொள்ள தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.