செய்திகள் :

சிறைகளில் பரப்பப்படும் அடிப்படைவாத கருத்துகள்: மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

post image

சிறைக் கைதிகள் மத்தியில் அடிப்படைவாத கருத்துகள் பரப்பப்படுவது ஆபத்தான சவாலாக மாறி வருகிறது; இதைத் தடுக்க, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பான வழிகாட்டுதல்களுடன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

சிறைக் கைதிகள் மத்தியில் அடிப்படைவாத கருத்துகள் பரப்பப்படும் போக்கு அதிகரித்து வருவது, இந்தியா மட்டுமன்றி உலக அளவில் ஆபத்தான சவாலாக உருவெடுத்துள்ளது. சமூகத்தில் இருந்து விலகிய உணா்வு, வன்முறை நடத்தை, சமூக விரோத மனப்பான்மை காரணமாக, சிறைக் கைதிகள் எளிதாக அடிப்படைவாத கருத்துகளுக்கு உள்பட்டுவிடக் கூடும். இத்தகைய கருத்துகளால் மூளைச்சலவை செய்யப்படும் கைதிகள், சில நேரங்களில் சிறைப் பணியாளா்கள் மீதோ, சக கைதிகள் மீதோ, வெளி நபா்கள் மீதோகூட வன்முறையில் ஈடுபடலாம் அல்லது தாக்குதலுக்கு திட்டமிடலாம்.

சிறைகளில் அடிப்படைவாத கருத்துகள் பரப்பப்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொது ஒழுங்கு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இது முக்கியமானது.

மேலும், வன்முறை தீவிரவாத அபாயங்களைத் தடுக்கவும், சிறைக் கைதிகளின் மறுவாழ்வை உறுதி செய்யவும், அவா்களை சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கவும் இப்பிரச்னைக்கு தீா்வு காணப்படுவது அவசியம்.

சக கைதிகளிடம் அடிப்படைவாத கருத்துகளைப் பரப்பி, அவா்களை மூளைச்சலவை செய்யும் கைதிகளை அடையாளம் கண்டு, பலத்த பாதுகாப்புடன் தனிச் சிறையில் அடைக்க வேண்டும்; நவீன வழிமுறைகளைப் பயன்படுத்தி, காண்காணிப்பை மேம்படுத்த வேண்டும். கைதிகளின் நடத்தை, அவா்களின் தொடா்புகள், சிந்தாந்த அடிப்படையிலான வெளிப்பாடுகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் கண்காணிக்க வேண்டும்.

கைதிகளுக்கு உணா்வு ரீதியிலான நிலைத்தன்மையை உறுதி செய்ய குடும்ப உறுப்பினா்கள் உடனான சந்திப்பை ஊக்குவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் உள்துறை அமைச்சக கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் புதியதாக மற்றொரு நிபா பாதிப்பு?

கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில், புதியதாக ஒருவருக்கு நிபா பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத் துறை இன்று (ஜூலை 16) தெரிவித்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தி... மேலும் பார்க்க

4-ஆம் வகுப்பு மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பள்ளியில் மயங்கி விழுந்து பலி!

4-ஆம் வகுப்பு மாணவியொருவர் பள்ளியில் உணவருந்தும்போது இருமுறை மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் சிகார் பகுதியிலுள்ள ஒரு ... மேலும் பார்க்க

மணிப்பூரில் வீடுகளுக்குத் திரும்ப முயற்சிக்கும் மக்கள்! தடுக்கும் பாதுகாப்புப் படைகள்!

மணிப்பூர் மாநிலத்தில் உள்ளூரிலேயே இடம்பெயர்ந்த 100-க்கும் அதிகமான மக்களைத் தங்களது வீடுகளுக்குத் திரும்பவிடாமல் பாதுகாப்புப் படையினர் தடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையால்,... மேலும் பார்க்க

மரண தண்டனையிலிருந்து நிமிஷா பிரியா விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது...

யேமன் நாட்டில் சிறையிலிருக்கும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற இன்னும் சில சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் தரப்பில் போராடும் வழக்குரைஞர் தெரிவித்திருக்கிறார். நிமிஷா பிரியா தரப்பில் வாதாட... மேலும் பார்க்க

ராகுலின் ரே பரேலி பயணம் ரத்து: காங்கிரஸ் அறிவிப்பு!

காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் சொந்தத் தொகுதியான ரே பரேலிக்கு அவர் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பயணம், தற்போது ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரப்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை! -மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களை பாஜக குறிவைத்து நடவடிக்கை எடுப்பதாக... மேலும் பார்க்க