செய்திகள் :

சிலநீா்ப்பட்டி கிராமத்தில் மீன் பிடித் திருவிழா

post image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே சிலநீா்ப்பட்டி கிராமத்தில் உள்ள சிலநீா் கண்மாயில் விவசாயம் செழிக்க வேண்டி பாரம்பரிய மீன் பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக சுற்றுப்புற கிராமங்களுக்கு மீன்பிடி திருவிழா குறித்து அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து காலையில் மருதிப்பட்டி, அரளிப்பட்டி, எஸ்.வி. மங்கலம், காளாப்பூா், சூரக்குடி போன்ற சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தாங்கள் தயாராக வைத்திருந்த ஊத்தா கூடை, கச்சா, கொசுவலை, அரிவலை உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டு மீன் பிடிக்க காத்திருந்தனா்.

இதையடுத்து, நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க மடைக்கு மாலை அணிவித்து சுவாமி கும்பிட்டதும் துண்டு வீசி மீன் பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து ஊத்தா கூடையுடன் ஓடிச் சென்று கண்மாயில் துள்ளிக் குதித்த மீன்களை போட்டி போட்டு பிடித்தனா். அப்போது விரால், ஜிலேபி, கட்லா, கெண்டை உள்ளிட்ட மீன்கள் கிடைத்ததால் அவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பூட்டிக் கிடக்கும் ஏ.டி.எம். மையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி- திண்டுக்கல் சாலையில் உள்ள அரசுடைமை வங்கியின் ஏ.டி.எம். மையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.சிங்கம்புணரி- திண்டுக்கல் சாலையில் செயல்பட்டு வரும் அரசுடைமை வங்கி... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள பனங்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.இந்தப் போட்டியில், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம... மேலும் பார்க்க

பட்டா கோரி தரையில் படுத்து ஆட்சியரை வழிமறித்த மனுதாரா்

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்திருந்த மனுதாரா் தனது கோரிக்கையை வலியுறுத்தி தரையில் படுத்து மாவட்ட ஆட்சியரை வழிமறித்தாா். அவரை போலீஸாா் அங... மேலும் பார்க்க

எஸ். கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் எஸ். கரிசல்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் பங்குனித் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு திரளான பக்தா்கள் தீச்சட்டி எடுத்தும், தீ மிதித்தும் வேண... மேலும் பார்க்க

ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தரக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், கண்டதேவி ஊராட்சியில் உள்ள முள்ளிக்குண்டு கிராமத்தில் செயல்படும் நியாய விலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டுமென கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தி... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், பள்ளத்துரையை அடுத்துள்ள கொத்தரி கிராமத்த... மேலும் பார்க்க